சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு புதிதாக 21 கட்டுப்பாடுகளை விதித்து, சென்னை மாநகராட்சி அதிரடியா உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களில் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு செயல்கள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இது தொடர்பாக சில இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், சில இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த பிரச்சனை குறித்து ஆலோசனை மேற்கொண்ட அதிகாரிகள், இது குறித்து சில அதிரடியான உத்தரவுகளை தற்போது பிறப்பித்து உள்ளனர்.

அதன்படி, “ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு அனுமதி வழங்க 21 புதிய நிபந்தனைகளை” சென்னை மாநகராட்சி தற்போது புதிதாக அறிவித்து உள்ளது.

அதன்படி,

- அனைத்து மசாஜ் சென்டர்களிலும் CCTV கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

- மசாஜ் சென்டர்களில் உள்ளே செயல்படும் போது வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்.

- ஸ்பா, மசாஜ் சென்டர்களில் இனி கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. 

- அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மசாஜ் சென்டர்கள் செயல்படக்கூடாது.

- வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

- எந்த வகையிலும் பாலியல் தொழில் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை செய்ய வேண்டும்.

- நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது.

- பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

- காவல் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு மேற்கொள்வார்கள்.

- ஒருவருக்கு சேவை வழங்கிய பிறகு, பணியாளர் தனது கையினை சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.

- ஒருவருக்கு சேவை வழங்கிய பின், அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன் கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

- உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்.

- இந்த குறிப்பிட்ட 21 புதிய விதி மீறல்கள் உறுதி செய்யப்பட்டால், அந்த ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களின் உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்படும்.