2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400% அதிகரித்துள்ளது என அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை , குழந்தைகளை பாலியல் ரீதியாக சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது, அது தொடர்பான தகவல்களை பரிமாறுவது உள்ளிட்டவை அடங்கியுள்ளன. 

இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் முதல் ஐந்து மாநிலங்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

c1

170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது .அதனை தொடர்ந்து கர்நாடகாவில்  144 வழக்குகள், மகராஷ்ராவில்  137 வழக்குகள், கேரளாவில்  107 வழக்குகள்  மற்றும் ஒடிசாவில்  71 வழக்குகள் இந்தாண்டு மட்டும் பதிவாகியுள்ளன.

மொத்தம் பதிவு செய்யப்பட்ட 842 வழக்குகளில் 738 வழக்குகள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக காட்சிகளை காண்பிப்பது, பாலியல் ரீதியாக சித்தரித்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது , பாலியல் தொடர்பான தகவல்களை பகிர்வது உள்ளிட்ட காரணங்களுக்காக தொடரப்பட்டவை ஆகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு எதிராக 164 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன.  கடந்த 2018 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு எதிராக 117 சைபர் குற்றங்களும், 2017 ஆம் ஆண்டில் 79 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக சைபர் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் , 2019 ஆம் ஆண்டிலிருந்து அது உச்சம் தொட்டுள்ளது, அதன் அபாயத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இதுபற்றி குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்பான கிரை அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பூஜா மர்வாஹா கூறியதாவது:

‘கொரோனா  வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் நீட்சியாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் ஆன்லைன் வழி கற்றலுக்கு வழிவகுத்தது.

c2

இதனால் அதிக நேரத்தை பொழுது போக்கு, கல்வி நோக்கங்களுக்காக குழந்தைகள் ஆன்லைனில் செலவிட வேண்டியுள்ளது. அதே சமயம் அதில் இருக்ககூடிய ஆபத்துகள் குறித்து சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளுக்கு அளிக்கப்படாததால் அவர்கள் இது போன்ற சைபர் குற்றங்களுக்கு இரையாகின்றனர். 

தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்காக இன்டர்நெட்டில் குழந்தைகள் அதிகமான நேரத்தை செலவிடும்போது, துரதிர்ஷ்டவசமாக குழந்தைகள் பல்வேறுவிதமான இடர்பாடுகளுக்கும் ஆளாகிறார்கள். சில நேரங்களில் ஆன் லைனில் பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

குழந்தைகள் மீது நடத்தப்படும் இது போன்ற அத்துமீறல்களை தடுப்பதில் பெற்றோர் , ஆசிரியர்கள், பாதுகாவலர்கள் கவனத்துடன் இருந்து கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும்.  குழந்தைகள் செல்ஃபோன், கணனி ஆகியவற்றில் ஆன் லைனைப் பயன்படுத்தும்போது, குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்கள், சமூகம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.