குழந்தைகள் தினத்தையொட்டி, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

stalin

குழந்தைகள் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியில், குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகளின் நாட்டின் செல்வங்கள், ஒளிச்சுடர், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.மேலும் குழந்தைகளின் தனி திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம் எனவும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி மழலை பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகி கற்க துணை நிற்போம் என்று வாழ்த்துமடலை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும் எனவும்  அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.