திரைப்படத்தோட கருத்துக்களை சினிமா தியேட்டரிலேயே விட்டுவிட்டு செல்வதுதான் சிறந்தது என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, தனது சொந்த நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தீபாவளியை முன்னிட்டு ஓ.டி.டி. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிட்ட ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. 

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் குறித்து நாள்தோறும் ஒவ்வொருவராக கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை சந்தித்திராத அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஒன்று திரண்டு சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 

a1

சமீபகாலமாக நடைபெறும் ஒவ்வொரு சினிமா சம்பந்தமான விழாக்களிலும் பேசு பொருளாகி இருப்பது 'ஜெய் பீம்' திரைப்பட விவகாரம் தான். இந்நிலையில் 'ஜெய் பீம்' திரைப்பட பிரச்சனை குறித்து நடிகர் ராதாரவி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள ஆன்டி இண்டியன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது திரைப்பட கருத்துக்களை திரையரங்குகளிலேயே விட்டு விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.ஜெய்பீம் திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  

மேலும் ஜெய்பீம் படத்தின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அவர், தற்போது ஒரு திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆன்டி இண்டியன் திரைப்படம் வெளியாகும்போது அந்த திரைப்படத்தை பற்றி பேசுவார்கள், விமர்சிப்பார்கள் என தெரிவித்தார். 

எனவே திரைப்பட கருத்துக்களை திரையரங்கோடு விட்டுவிட்டு வருவதே சிறந்தது என அவர் பேசினார். ஆன்டி இண்டியன் திரைப்படத்திலும் பல சர்ச்சைகள் உள்ளது. இருந்தாலும் சிறந்த முறையில் இயக்குனர் கையாண்டு உள்ளார் எனவும் ராதாரவி கூறினார். 

r2

தற்போதைய சூழலில் உண்மை கதை என்று பெயர்களை மாற்றி மாற்றி எடுக்க கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதுபோல பல திரைப்படங்களை எடுக்க முடியுமெனவும் ராதாரவி விமர்சித்தார்.  தற்போதைய சூழலில் ஓ.டி.டியில் பல திரைப்படங்கள் வெளியாகின்றன, ஐந்து ஆண்டுகள் கழித்து நடிகர்களின் சம்பளங்களை ஓ.டி.டி நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கப் போகின்றன எனவும் அவர் கூறினார்.