தமிழ்நாட்டில் முதல் முறை முதலமைச்சராக  பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழ் சினிமாவின்  மிகச்சிறந்த இயக்குனரும் நடிகருமான  திரு.கே.பாக்யராஜ் அவர்கள் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

மரியாதைக்குரிய தமிழக முதல்வர் உயர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும்  பணிவன்பான வணக்கத்துடன் வாழ்த்துகளுடன் உங்கள் பாக்கியராஜ் எழுதுவது,

பொறுத்தார் பூமி ஆள்வார்!! ஆளும் பொறுப்பு  தங்களை தேடிவர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதைவிட தங்களது தன்னம்பிக்கையும் தளராத உழைப்புமே மிக மிக உன்னதமானது என என் மனம் நெகிழ்கிறது. 

தேர்தல் முடிவு வந்ததும் சந்தித்து வாழ்த்த நினைத்தேன் ஆனால் எனக்கிருந்த நோய் அறிகுறி, சளி தொல்லை காரணமாக தங்களை அசௌகர்யப்படுத்த விரும்பாது தவிர்த்தேன். இப்போது அதிகாரப்பூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றி கடிதம் மூலமாகவாவது  வாழ்த்துகிறேன்.

தமிழ் சமுதாயத்தை சீரமைக்கும் சிறப்பான சேவை பணியாற்ற அப்பாவின் எழுத்தாணியுடன், அன்பு மகனான தாங்கள் அனைத்து தமிழக தாய்மார்களின்  சுமையை குறைத்து கொரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் பொருட்டு  நிறைவான பால் வார்த்து விட்டீர்கள், குறைவான விலையில்.நெகிழ்வாக இருந்தது.

காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன்  பரிசீலித்திருக்கிறீர்கள்  மகிழ்வு எனது குடும்பத்தார் பாக்கியா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேன் நிறைவான ஆட்சி அரங்கேறி நாடு நலம் பெற அப்பாவின் அருளுடன் இருக்கும் என வாழ்த்தி

உங்கள்  அன்பு,

கே.பாக்யராஜ்

என வாழ்த்தியுள்ளார்.

 

தமிழ்நாட்டில் முதல் முறை முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜ் அவர்கள் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கைப்பட கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மரியாதைக்குரிய தமிழக முதல்வர் உயர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடன் வாழ்த்துகளுடன் உங்கள் பாக்கியராஜ் எழுதுவது, பொறுத்தார் பூமி ஆள்வார்!! ஆளும் பொறுப்பு தங்களை தேடிவர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதைவிட தங்களது தன்னம்பிக்கையும் தளராத உழைப்புமே மிக மிக உன்னதமானது என என் மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததும் சந்தித்து வாழ்த்த நினைத்தேன் ஆனால் எனக்கிருந்த நோய் அறிகுறி, சளி தொல்லை காரணமாக தங்களை அசௌகர்யப்படுத்த விரும்பாது தவிர்த்தேன். இப்போது அதிகாரப்பூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றி கடிதம் மூலமாகவாவது வாழ்த்துகிறேன். தமிழ் சமுதாயத்தை சீரமைக்கும் சிறப்பான சேவை பணியாற்ற அப்பாவின் எழுத்தாணியுடன், அன்பு மகனான தாங்கள் அனைத்து தமிழக தாய்மார்களின் சுமையை குறைத்து கொரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் பொருட்டு நிறைவான பால் வார்த்து விட்டீர்கள், குறைவான விலையில்.நெகிழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்திருக்கிறீர்கள் மகிழ்வு எனது குடும்பத்தார் பாக்கியா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேன் நிறைவான ஆட்சி அரங்கேறி நாடு நலம் பெற அப்பாவின் அருளுடன் இருக்கும் என வாழ்த்தி உங்கள் அன்பு கே பாக்யராஜ் என வாழ்த்தியுள்ளார்