அக்காவைப் பார்க்க அடிக்கடி வீட்டிற்கு வந்த மைனர் பெண்ணான மச்சினிச்சியை, மாமன் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இரு வீட்டார் முறைப்படி கடந்த ஆண்டு திருமணம் நடந்து உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, தனது மனைவியுடன் சரவணன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். 

இப்படியான சூழ்நிலையில் தான், திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வரும் அக்காவை பார்ப்பதற்காக, அவரின் 16 வயதான தங்கை, அடிக்கடி அக்கா வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்.

அப்போது, மைனர் பெண்ணான அந்த மச்சினியின் மீது சபலப்பட்ட சரவணன், அந்த சிறுமியிடம் அடிக்கடி பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ஆனால், அந்த சிறுமி இதனை எதிர்க்காமல் எதுவும் சொல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், இதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட அக்காவின் கணவன் சரவணன், தனது மனைவியின் தங்கையான அந்த 16 வயது சிறுமியை மயக்கி, அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்ந்து சில மாதங்கள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த 16 வயது சிறுமி கர்ப்பமாகி உள்ளார். ஆனால், தான் கர்ப்பம் தரித்தது தெரியாமல், எப்போதும் பொல் அந்த சிறுமி இருந்து உள்ளார். 

அப்போது, நாட்கள் செல்ல செல்ல அந்த சிறுமியின் வயிறு சற்று பெரிதாகி உள்ளது.

அது நேரத்தில், அந்த சிறுமிக்கு திடீரென்று வயிறு பெரிதாகி வலியும் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகளை மருத்தவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், “சிறுமி, கர்ப்பமாக இருப்பதாக” கூறி உள்ளனர். 

இது குறித்த தகவலை மருத்துவர்கள் கூறிய போது, கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகளிடம் இது குறித்து கேட்டு உள்ளனர். 

மேலும், அந்த சிறுமியை அதே மருத்துவமனையில் பிரசவத்துக்காக சிறுமியின் பெற்றோர் சேர்த்து உள்ளனர். 

இதனையடுத்து, அந்த 16 வயது சிறுமிக்கு, ஆண் குழந்தை பிறந்தது. 

அதன் தொடர்ச்சியாக, மருத்துவமனையின் சார்பிலேயே போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து, மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய நிலையில், அந்த சிறுமியின் அக்கா கணவனை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அத்துடன், அந்த சிறுமியை அங்குள்ள பெண் அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.