சண்டை தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததால், கணவனை கொல்ல கடந்த 7 ஆண்டுகளாக சாப்பாட்டில் மெல்ல கொல்லும் விஷம் கலந்து சமைத்த மனைவி, கணவனிடம் கையும் களவுமாக பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர், கோட்டயம் பாலா பகுதியைச் சேர்ந்த ஆஷாவை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

கணவன் - மனைவியான இருவருமே சேர்ந்து, அந்த பகுதியில் ஐஸ்கிரீம் தொழில் நடத்தி வருகின்றனர். 

அதாவது, கேரளாவில் உள்ள ஐஸ்கிரீம் பார்களுக்கு ஐஸ்கிரீம் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்திருக்கிறார்கள். இந்த தொழிலில் கணவன் சுரேஷிற்கு உதவியாக அவரது மனைவி ஆஷா இருந்து வந்திருக்கிறார்.

இந்த தொழில் மூலமாக கிடைத்த லாபத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, இவர்கள் கோட்டயத்தில் பாலா என்னும் பகுதியிலேயே சொந்தமாக வீடு கட்டி, குடி பெயர்ந்தார்கள். 

ஆனால், புது வீடு கட்டிய பிறகு கணவன் சுரேஷுக்கும் - மனைவி ஆஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தொடர்ச்சியாக சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது. 

இதனையடுத்து, கணவன் சுரேஷிற்கு தொடர்ந்து உடல் நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதற்காக, அவர் பல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். அப்போது, அவருக்கு எந்த பலனும் அளிக்கவில்லை.

அந்த நேரத்தில், வேலை நிமித்தமாக ஒரு மாத காலம் வெளியூர் சென்று தங்கி உள்ளார். அந்த நேரத்தில், அவரின் உடல் நிலையில், எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. மாறாக, அவரது உடல் நிலை சீராகவே இருந்து உள்ளது. 

இதனால், அவருக்கு சற்று அதிர்ச்சியாகவும் சந்தேகமாகவும் இருந்தது. பின்னர், அவர் ஒரு மாதம் சென்ற பிறகு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது, அவரது உடல் நிலையில் மீண்டும் பழையபடி பாதிகக்ப்பட்டு மீண்டும் அதே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

அப்போது, “வெளியூரில் ஒரு மாதம் தங்கி இருந்தபோது உடல் நிலை நன்றாக இருந்தது, ஆனால் தற்போது வீட்டிற்கு வந்த உடனேயே ஏன் மீண்டும் நமது உடல் நிலை சரியில்லாமல் போகிறது?” என்று, யோசித்து, சற்று சந்தேகம் அடைந்து கணவன் சுரேஷ், தனது மனைவியை கண்காணிக்க தொடங்கி உள்ளார்.

அந்த நேரத்தில், தனது மனைவி அடிக்கடி மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று, மருந்து வாங்குவதை கவனித்து உள்ளார் கணவன் சுரேஷ்.

இதனால், இன்னும் சந்தேகம் அடைந்த அந்த கணவன், மனைவி ஆஷாவின் தோழியை பிடித்து விசாரித்து உள்ளார். அப்போது, பயந்து போன அந்த தோழி எல்லா உண்மைகளையும் கூறி உள்ளார்.

அதாவது, “மெடிக்கல் ஷாப்பில் இருந்து மாத்திரைகள் வாங்கிட்டு வந்து, மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை கணவனுக்கு கொடுக்கும் சாப்பாட்டில் கலந்து கொடுத்து வந்திருக்கிறார்” என்பது தெரிய வந்தது. 

அதுவும், “கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதனை அந்த மனைவி ஆஷா செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, “கணவன் சாக வேண்டும், ஆனால் தன் மீது எந்தப் பழியும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே, மெல்லக் கொல்லும் இந்த விஷத்தை சாப்பாட்டில் தினமும் அந்த மனைவி கலந்து கொடுத்து வந்திருக்கிறார்” என்பது, தெரிய வந்திருக்கிறது. 

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த கணவன் சுரேஷ், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் அவரது மனைவியை அதிரடியாக கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனாவல், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.