2021 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டம் வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சென்னை சிஎஸ்கே அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா என்னும் பெருந் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா தொற்றின் 2 வது அலைகளுக்கு மத்தியில் தான், இந்தியாவில் 14 ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி தொடங்கியது.

இந்த முறை போட்டி தொடங்கும் முன்பும், போட்டிகள் தொடங்கிய பின்பும் வீரர்கள் சிலரும், நடுவர்கள் சிலரும் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்தனர். 

எனினும், இது வரை 29 லீக் போட்டிகள் நடத்திருக்கும் நிலையில், விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த நடப்பு ஐபிஎல் தொடரிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. 

அதாவது, நேற்று முன் தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அந்த அணியில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது தெரிய வந்தது.

இதனால், அன்றைய தினம் பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஐபிஎல் லீக் போட்டி அப்படியே நிறுத்தப்பட்டது. அந்த போட்டி மற்றொரு நாள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. 

அத்துடன், கொரோனா பாதிக்கப்பட்ட இரு வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். மீதமுள்ள வீரர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது.

அதே போல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள ஒரு சிலரும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுடன், சன் ரைசர்ஸ் 

ஹைதராபாத்தின் விருத்திமான் சஹா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸின் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் கொரோனா தொற்றானது நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது. இதனால், நடப்பு ஐபிஎல் தொடர் நடத்துவதற்கு மேலும் தலைவலியாக அமைந்தது. 

இதனால், பாதுகாப்பு வளையமாக இருந்த பையோ பபுளினுள் வைரஸ் ஊடுருவியது எப்படி? என்று குழம்பிப் போன ஐபிஎல் நிர்வாகம், பதறிப் போய் “அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், உடனடியாக திடீரென்று ஆலோசனை” நடத்தியது. அப்போது, வேறு வழியில்லாமல் நடப்பு ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. 

மேலும், பிசிசிஐ அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களையும், பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவதில் கவனம் செலுத்தி வந்தது.

முக்கியமாக, நியூசிலாந்திற்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கும், ஜூன் முதல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் 

தொடருக்கும் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், மீதம் இருக்கும் ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மாதத்தில் நடத்த அணியின் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்குள், வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் டி 20 உலகக் கோப்பைக்கு தயாராக இருப்பார்கள் என்றும், அணியின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் கூறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அத்துடன், செப்டம்பர் மாத மத்தியில் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் முடிகிறது. அதன் பிறகு டி20 உலக கோப்பை வரை இந்திய அணிக்கும் பல சர்வதேச அணிகளுக்கும் தொடர் இல்லாததால் செப்டம்பர் மாதத்தில் மீதம் உள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என தற்போது திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. 

இது தொடர்பாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறும்போது, “இப்போது, நாம் ஐபிஎல் போட்டிகள் நடத்த சர்வதேச அணிகளின் அட்டவணையின் படி, தேதிகள் கிடைக்குமா என உறுதி செய்ய வேண்டும் என்றும், தேதிகள் கிடைக்கும் பட்சத்தில், அதைப் பற்றி ஆராய்ந்து முடிவு எடுப்போம்” என்றும், கூறியுள்ளார். 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஜ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா முன்னாள் வீரருமான மைக் ஹசிக்கும் தற்போது கொரோ வைரஸ் தொற்று தாக்கி இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.