தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் இஸ்ரோ விஞ்ஞானியாக 1982ஆம் ஆண்டு இணைந்தார். இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த சிவன், பிஎஸ்எல்வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு அதிகமாக இருந்து வந்தது. 


 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார் கே.சிவன். இவரின் பதவிக்காலம் 2021 ஜனவரி 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஜனவரி 14ஆம் தேதி வரை அவர் பதவியில் தொடர்வார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.