பிரிந்து சென்ற மனைவி உடன் மற்றொருவர் கள்ளக் காதலில் இருந்ததால், இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்த பெண்ணின் முன்னாள் கணவன், அந்த காதலனை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்து உள்ள புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா லோகித ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பரத் என்பவர், அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

அதே போல், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே அருகே ஒசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வினுதா, என்ற பெண்ணும், பரத்தும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, இவர்கள் இருவரும் அங்குள்ள லோகித ஹள்ளியில் தம்பதிகளாக வசித்து வந்தனர்.

இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கியது முதல், கணவன் - மனைவியான இருவருக்குள்ளும் குடும்பப் பிரச்சினை வெடித்து உள்ளனது. இதனால், கணவன் - 
மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இப்படியே, அவர்களுக்குள் சண்டை நாள்தோறும் தொடரவே, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அவர் மனைவி வினுதா, கணவன் பரத்துடன் வாழப் பிடிக்காமல், பிரிந்து சென்று விட்டார். 

இதனையடுத்து, அவர் பெங்களூரு அருகே பேடரஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆந்திரஹள்ளியில், ஒரு வாடகை வீட்டில் வினுதா வசித்து வந்தார். 

இப்படி, வினுதா தனியாக வசித்து வந்த நிலையில், வினுதாவுக்கும், தரிகெரேயை சேர்ந்த 26 வயதான சிவக்குமார் என்பவருக்கும் இடையே கள்ளத் காதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வினுதாவும், சிவக்குமாரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் திருமணத்திற்காக முன்பாகவே அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு இருந்தது 
என்றும், கணவன் பரத்தை திருமணம் செய்த பின்பு வினுதா லோகிதஹள்ளிக்கு வந்து விட்டதால், அந்த பழக்கம் முறிந்து விட்டது என்றும், தற்போது  பெங்களூருவுக்கு வேலை தேடி வந்த சிவக்குமார், சிக்கமகளூருவில் தங்கியிருந்த போது வினுதாவை சந்தித்துப் பேசி தங்களது பழைய காதலை மீண்டும் புதுப்பித்துக்கொண்டனர் என்றும், கூறப்படுகிறது.

இதனையடுத்து. கணவரைப் பிரிந்து வினுதாவும், சிவக்குமாருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு, வினுதாவின் வீட்டுக்கு சிவக்குமார் அடிக்கடி வந்து உல்லாசம் அனுபவித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மனைவியின் கள்ளக் காதல் விசயம், எப்படியோ பரத்திற்குத் தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பரத், “தனது மனைவியுடனான கள்ளக் காதலை கை விடும்படி” சிவக்குமாரிடம் கூறி இருந்தார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த சிவக்குமார், வினுதாவுடன் இருந்த கள்ளத் தொடர்பை மீண்டும் தொடர்ந்து உள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த பரத்,  சிவக்குமாரை கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார். 

அதன் படி, நேற்று முன் தினம் இரவு வினுதாவின் வீட்டுக்கு சிவக்குமார் சென்று உள்ளார். அப்போது, கள்ளக் காதலனுக்காக சமைப்பதற்காக வினுதா, கடைக்குச் சென்று உள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் சிவக்குமாருக்கு தெரியாமல் பரத் வீட்டுக்குள் நுழைந்து, கட்டிலுக்கு அடியில் சென்று பதுங்கிக் கொண்டு உள்ளார். 

பின்னர், கடையில் இருந்து வீட்டுக்கு வந்த வினுதா, காதலன் சிவக்குமாருடன் சிறிது நேரம் பேசிவிட்டு குளியலறைக்குள் சென்று உள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் குளியலறை கதவை பரத் வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, சிவக்குமாருடன் மல்லுக்கட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவக்குமாரை, சரமாரியாக வெட்டி உள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த சிவக்குமார், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்து உள்ளார்.

அதன் பிறகு, குளியலறை கதவைத் திறந்து விட்டுப் பரத் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், குளியல் அறையில் இருந்து வெளியே வந்த வினுதா, சிவக்குமாரின் நிலைமையைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து, பேடரஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிவக்குமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், “வினுதாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால், சிவக்குமாரை பரத் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த பரத்தையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.