இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 1.79 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

corono இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 லட்சத்து 79 ஆயிரத்து 723-ஐ விட சற்று குறைவாகும்.

மேலும் நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 69 ஆயிரத்து 959 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 277 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 84 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது.அதனைத்தொடர்ந்து  நாடு முழுவதும் இதுவரை 152.89 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.