தனியார் ஏற்றுமதி நிறுவனம் பண மோசடி செய்ததாக கானாத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா புகார் அளித்துள்ளார்.
கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது மாதந்தோறும் ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ரூ 1.80 லட்சம் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதை நம்பிய நடிகை சினேகா பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி மாதம்தோறும் பணத்தை அந்த நிறுவனம் தரவில்லை. இதனால் அந்த நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி நடிகை சினேகா கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு தொழிலதிபர் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.