வடகிழக்கு பருவமழையால் மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்த நிலையில் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கவேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.4 லட்சம் தருவதாக தெரிவித்திருந்தது.மேலும் மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், நிவர்புயல் கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் மேலும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.