இளம் பெண்ணை காதலித்து வந்த காதலன் ஒருவன், தனது காதலியை பாலியல் தொழிலில் செய்யும் கும்பலிடம் விற்றுவிட்டு தப்பிச் சென்றதை கேள்விப்பட்ட இளம் பெண்ணின் தந்தை, அந்த காதலனை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் ஸ்போகெனி நகரை சேர்ந்த 60 வயதான ஜான் சென்மன், தனது 19 வயது மகளுடன் வசித்து வந்தார்.

இப்படியான சூழலில், அவரின் மகள் அந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதான அரோன் சோரன்சன் என்ற இளைஞரை காதலித்து வந்து உள்ளார்.

இப்படியாக, அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்,  19 வயதான காதலன் அரோன் சோரன்சன், பணத்தின் மீது உள்ள ஆசையால் தனது காதலியான ஜான் இசென்மனின் மகளை அந்த பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழில் செய்துவரும் கும்பலிடம் விற்று உள்ளார்.

அதாவது, அங்குள்ள சியாட்டல் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டும் கும்பலிடம் தனது காதலியை 1,000 அமெரிக்க டாலருக்கு, அரோன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனை செய்திருக்கிறார்.

இதனையடுத்து, தனது மகள் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கியதை அறிந்த தந்தை ஜான் சென்மன், அதே அக்டோபர் மாதம் சியாட்டல் சென்றார். அவர் அங்கு பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கிய தனது மகளை பத்திரமாக மீட்டு உள்ளார். 

அத்துடன், தனது மகளை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்பனை செய்தது அவரது காதலன் அரோன் சோரன்சன் என்பதையும் அந்த பெண்ணின் தந்தை கண்டுபிடித்தார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை ஜான், தனது மகளின் காதலனான அரோன் சோரன்சனை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துரத்திச் சென்று தனது காரில் கடத்திச் சென்று உள்ளார். 

பின்னர், ஸ்போகெனி நகருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதிக்குள் காரை நிறுத்திய ஜான், மகளின் காதலன் அரோன் சோரனிடம் நியாயம் கேட்டிருக்கிறார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

 அப்போது, ஜான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகளின் காதலனை குத்தியும், கிழே கிடந்த பெரிய கல்லை தூக்கி ஜானின் தலையில் போட்டு, அவரை கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். 

மகளின் காதலன் அரோன் உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை காரின் டிக்கிக்குள் அடைத்து வைத்து விட்டு, காரை ஒதுக்குபுறமான பகுதியில் நிறுத்திய ஜான், அங்கிருந்து வீட்டிற்கு சென்று உள்ளார். இதனால், அந்த கார் பல மாதங்களாக அதேப் பகுதியில் நின்று இருந்துள்ளது.

இந்த நிலையில், அந்த நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக பழுதடைந்த நிலையில் பல மாதங்களாக நின்றுகொண்டிருந்த காரை, கடந்த மாதம் சில இளைஞர்கள் சோதனை செய்தனர். 

அப்போது, அந்த காருக்குள் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை  நடத்திய நிலையில், எலும்புக்கூடு அரோன் சோரன்சனின் என்பது தான் என்பதை முதலில் கண்டுப்பிடித்தனர்.

பின்னர், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், ஜான் சென்மன் தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்து உண்மையை கூறியுள்ளார்.

அப்போது, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான், “தனது மகளை பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்பனை செய்த காரணத்தால் கொலை செய்ததை” அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஜான் அங்குள்ள ஸ்போகெனி நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.