இந்திய திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டாரின் 2.O படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்2 திரைப்படத்தை தொடங்கினார். ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து தொடர்ந்து பல காரணங்களால் இந்தியன் 2 திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது 

இதனையடுத்து தமிழில் மெகா ஹிட்டாக அந்நியன் திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்காக நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். முன்னதாக தெலுங்கில் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் #RC15 திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். 

ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிக்க ஜெயராம், அஞ்சலி, நவீன் சந்திரா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும்  #RC15 திரைப்படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய S.தமன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து இயக்குனர் ஷங்கர், ராம்சரண், ஒளிபதிவாளர் திருநாவுக்கரசு உடன் ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவு ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படம் இதோ...