சன் டிவியில் ஒளிபரப்பான பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று நாயகி.இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சுஷ்மா நாயர்.மாடலாகவும்,பேஷன் டிசைனராகவும் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய இவர் அடுத்து நடிகையாக நடித்து தனது முத்திரையை பதித்தார்.

சுமங்கலி தொடரில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர்,அடுத்ததாக நாயகி தொடரில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.இந்த தொடரை தொடர்ந்து தனது நீண்டநாள் காதலரான கிரிக்கெட் பயிற்சியாளர் லிஜோ டி ஜானை கரம்பிடித்தார் சுஷ்மா நாயர்.

நடிப்பை தவிர குக்கிங்,பேஷன் டிசைனர் என தனது திறமைகளை நிரூபித்து கலக்கி வந்தார் சுஷ்மா.இவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் சுஷ்மா.தமிழும் சரஸ்வதியும் தொடரில் சிறிய முக்கிய வேடத்தில் நடித்து திருமணத்துக்கு பிறகு ரீ என்ட்ரியை கொடுத்தார் சுஷ்மா.அடுத்ததாக என்றென்றும்,புன்னகை,செந்தூரப்பூவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து அசத்தினார் சுஷ்மா.

இவர் ஹீரோயினாக நடித்த Rhymes என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இவர் நாயகி சீரியலை அடுத்து , சன் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.ஹிமா பிந்து,நந்தன் லோகநாதன் நடிக்கும் இலக்கியா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்,இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.