தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகரான நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் வெளியிடாக ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதே தினத்தில் மற்றொரு உச்ச நட்சத்திர நாயகரான தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இந்த பொங்கலை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் ஃபேமிலி என்டர்டெய்னராக தளபதி விஜய்யின் வாரிசு படம் தயாராகி இருக்கும் நிலையில், அதிரடியான பக்கா மாஸ் ஆக்சன் பிளாக் திரைப்படமாக அஜித் குமாரின் துணிவு திரைப்படம் தயாராகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை & வலிமை வரிசையில் இயக்குனர் H.வினோத் உடனான அஜித்குமாரின் வெற்றி கூட்டணி மூன்றாவது முறையாக தொடர்கிறது.

போனி கபூர் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் துணிவு படத்திற்கு சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் குமாரின் கூலான லுக்கும், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி அவர்கள்  துணிவு திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் துணிவு படத்திற்காக முதல் முதலில் இயக்குனர் H.வினோத் அவர்களை சந்தித்தது குறித்து பேசிய போது,

"திடீரென ஒரு நாள் ஹைதராபாத்தில் இருந்தார் (H.வினோத்) எனக்கு போனில், “எங்கு இருக்கிறீர்கள் அண்ணே?” என்றார். நான் “ஹைதராபாத்தில் தான் இருக்கிறேன்” என்றேன். “மாலை சந்திப்போமா?” என்றார். “மாலை என்ன நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் நான் இப்போதே வருகிறேன்” என உடனே அங்கே போனேன். படப்பிடிப்பு தளத்திற்கான செட் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. இயக்குனர் தம்பியுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த போது, “இதுதான் அண்ணா படம்” என புத்தகத்தை கையில் கொடுத்தார். அங்கிருந்து கிளம்பி நான் அலுவலகத்திற்கு செல்வதற்குள் படித்து முடித்துவிட்டேன். படித்து முடித்தவுடன் உடனடியாக திரும்பி சென்று வைத்துக் கொள்ளுங்கள்... ஏனென்றால் அதனுடைய மதிப்பு அதனுடைய சக்தி நமக்கு தெரியும் அல்லவா நாம் வைத்திருக்கக் கூடாது என்று அவரிடம் கொடுத்துவிட்டு, உட்கார்ந்திருக்கும் போது தான் தம்பி சொன்னார். “இந்த கமிஷனர் கதாபாத்திரம் நீங்கள் நடிக்க வேண்டும் அண்ணா” என்றார். மிகச் சிறப்பாக இருக்கிறது தம்பி, படிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை முடித்ததும் தெரியவில்லை. ஏனென்றால் இந்த வேகத்தில் தான் படமும் இருக்கும் என்று இருந்தது. அதை படித்தவுடன் மிகவும் சந்தோஷமாகிவிட்டது. அதிரடியான ஒரு முரட்டுத்தனமான ஆக்சன் இருக்கிறதல்லவா.. அதாவது ஜல்லிக்கட்டு மாதிரி! அந்த மாதிரி தான் இருக்கும் படம் ஆரம்பித்ததில் இருந்து கடைசி வரைக்கும். அது மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த தளத்தில் நமக்கும் ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை படித்த உடனே “நீங்கள் நிறைய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இப்போது நடப்பது போல் நடக்கக் கூடாது. இப்போது பேசுவது போல் பேசக்கூடாது. வேறு ஒரு ஆளாக இருக்க வேண்டும்” என தம்பி சொன்னார் உடனே தயாரானோம்…” என்ன நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட சமுத்திரக்கனியின் அந்த முழு பேட்டி இதோ…