நடந்து முடிந்துள்ள 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி பொது மக்களின் அமோக ஆதரவைப் பெற்று, 3 வது இடம் பிடித்து உள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்து உள்ள 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக - அதிமுக என இருபெரும் கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்களும் அதிக இடங்களில் வெற்றிப் பெற்று இருக்கிறார்கள். இதில், திமுக ஆட்சியை பிடித்து உள்ள நிலையில், ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தற்போது தமிழகத்தின் எதிர் கட்சியாக அமர்ந்து உள்ளர்து. 

இதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய என்ன வென்றால், நாம் தமிழர் கட்சியானது, தனக்கான தனி இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது. அதாவது, நாம் தமிழ் கட்சி பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கையானது, வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் 3 வது பெரிய கட்சியாக நாம் தமிழர் தற்போது உருவெடுத்து உள்ளது, இந்த தேர்தலின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.

அதாவது, தமிழகத்தின் 16 வது சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணியும், அதிமுக தலைமையிலான பாஜக அங்கம் வகித்த கூட்டணியும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் தனி கூட்டணியாகவும், அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேமுதிக தனி கூட்டணியாகவும், நாம் தமிழர் தனி அணியாகவும் இந்த தேர்தலில் போட்டியிடன். இதனால், நடந்து முடிந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது.

இதில், மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்த நிலையில், 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி மட்டுமே யாருடனும் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிட்டது. மற்ற கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்கு குறைவான இடங்களை ஒதுக்கப்பட்டிறுந்தது. ஆனால், நாம் தமிழர் கட்சியானது, இந்த தேர்தலில் பெண்களுக்கு சரிபாதியாக 117 தொகுதிகளை ஒதுக்கியது. இது, தமிழகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் பெற்றதோடு, அனைவரும் பேசும் படியாகவும் அமைந்திருந்தது.

முக்கியமாக, இந்த தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழகர் கட்சி பெற்ற வாக்கு சதவீதத்தையும், மக்கள் மத்தியில் அக்கட்சியின் அரசியல் அங்கீகாரம் எந்தளவுக்கு உயர்ந்து இருக்கிறது என்பதையும் பார்க்கும் போது, அது தற்போது கூடதலாக உயர்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது. 

கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியானது, 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அதில், அந்த கட்சி, வெறும் 1.07 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 

அதன் பிறகு, 2017 ம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.15 சதவிகித வாக்குகள் பெற்று, 4 ஆம் இடத்திற்கு முன்னேறியது.

அதே போல், கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15 சதவீத வாக்குகளை பெற்றது. 

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9 சதவீத வாக்குகளை பெற்றது.

இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக - திமுக கூட்டணிக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

எனினும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட 37 ஆயிரம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பி. சங்கர் இதில் வெற்றி பெற்றுள்ளார். இதில், 2 ஆம் இடத்தை அதிமுக வேட்பாளர் கே.குப்பன் பெற்று உள்ளார்.

அதே நேரத்தில், திருவொற்றியூர் தொகுதியில் சீமான் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எதிர்பாரத விதமாக தோல்வியை தழுவினார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நடந்துமுடிந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்ற போதிலும், தமிழகத்தில் 178 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3 வது இடத்தை பிடித்து உள்ளனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, தமிழகத்தில் 3 வது பெரிய கட்சியாக நாம் தமிழர் தற்போது வளர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் எத்தனையோ பெரிய கட்சிகள் இருக்கும் நிலையில், குறுகியகாலகட்டத்திலேயே நாம் தமிழர் கட்சியியானது அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதன் மூலமாக, தமிழக அரசியல் நாம் தமிழர் கட்சி தனி கவனம் பெற்று இருப்பது, மற்ற கட்சிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.