சிகிச்சைக்காக வந்த தாயை போதை ஊசி போட்டு மயக்கி, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த டாக்டர் ஒருவர், அந்த பெண்ணின் மகளான கல்லூரி மாணவிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பு வருகிறார்.

இந்த இளம் பெண்ணின் தாயார், காரைக்குடியில் உள்ள துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். 

அத்துடன், இந்த இளம் பெண்ணின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 

இந்த சூழலில் தான், அந்த இளம் பெண்ணின் தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அப்போது, தனது தாயாரை அழைத்துக்கொண்டு அந்த இளம் பெண், காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையான பி.கே.என். மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்று உள்ளார். 

அந்த மருத்துவமனை டாக்டரான மோகன் குமாருக்கும், சிறுமியின் தாயாருக்கும் இந்த தொடர்பு மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அத்துடன், அந்த இளம் பெண்ணின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததை காரணம் காட்டி, அந்த டாக்டர் மோகன் குமார், அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று உள்ளார். 

முக்கியமாக, அப்படி வரும் அந்த டாக்டர், இரவு வரை அந்த பெண்ணின் தாயின் படுக்கை அறையில் தங்கியிருந்து வந்திருக்கிறார்.

தாயாரின் இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண், இது குறித்து தனது தந்தைக்கு புகார் அளித்து உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த தந்தையும், தனது மனைவியை கண்டித்து உள்ளார். 

அதே போல், இந்த மாணவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, அந்த மாணவியை டாக்டர் மோகன்குமார் காரில் அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், அப்போது மாணவியின் தோளில் கை போட்டுக் கொண்டு, அவரது அம்மாவுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை காண்பித்து, “நீயும் என்னுடன் இதே போல், இன்னும் நெருக்கமாக இரு” என்று, வற்புறுத்தி வந்திருக்கிறார்.

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

குறிப்பாக, இந்த கொரானா காலத்தில், அந்த பெண் ஆன்லைனில் வீட்டில் படித்து கொண்டிருந்தபோது, அங்கு வரும் டாக்டர், “பயாலஜி சொல்லித் தருகிறேன்” என்று, கூறி அருகில் நெருக்கமாக அமர்ந்துகொண்டு, யூ டியூப்பில் ஆபாச வீடியோவை காண்பித்து “இது போல தான் பாடத்தில் வரும்” என்று, தொடர்ந்து பாலியல் ரீதியான டார்ச்சர் செய்து உள்ளார்.

மிக முக்கியமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அந்த பெண் அவரது தம்பி, தங்கையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த டாக்டர் மோகன்குமார், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்து மீறி நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஆன்லைனில் காவல் துறைக்கு புகார் அளித்தார். 

இது தொடர்பாக காரைக்குடி டி.எஸ்.பி, காரைக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயமணி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தான், எலும்பு முறிவு டாக்டரான மோகன்குமாரை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.