டாப் டக்கர் அழகியான மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் வென்ற இளம் பெண்ணிடம், 56 வயது நபர் ஒருவர், “போலீசார்” என அறிமுகமாகி, யூத் வேடத்தில் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை உல்லாசமாக வாழ்ந்து மோசடியாக ஏமாற்றிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும், சென்னை அருகில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்று” அசத்தினார். 

அழகியான அந்த இளம் பெண், அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். 

அப்படியான அந்த தருணத்தில், ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்பவர், இந்த அழகியிடம் அறிமுகமாகி உள்ளார்.

அப்போது, “நான் காவல் துறையில் எஸ்எஸ்ஐ ஆக பணி புரிவதாக” கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில், சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்த அந்த அழகீ, ஓஎம்ஆர் சாலையில் உள்ள படூர் ஊராட்சியில் வீடு ஒன்றை, வங்கியின் மூலம் வாங்கி உள்ளார். 

அந்த வீட்டை வாங்கிய பிறகு தான் அந்த வீடு மீது ஏற்கனவே வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து, தன்னை ஏமாற்றிய வங்கி மீது அந்த அழகி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மூலம், வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்துள்ளார்.

அத்துடன், அந்த அழகியின் பெற்றோர் நல்ல வசதியான நிலையில் இருப்பதும், அதே நேரத்தில் அவர்கள் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் தாய் நோய் வாய்ப்பட்டு இறந்து உள்ளார்.

இதனால், இனனும் மனமுடைந்து காணப்பட்ட அந்த அழகியிடம் “உங்கள் வீட்டிற்குள் சாத்தான் புகுந்து உள்ளதாகவும், இதனால் தான் உங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும்” அந்த போலீசான ஆண்ட்ரூஸ் கூறி, சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும் என மத போதகர் ஒருவரையும், தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரை அங்கு அழைத்து சென்று உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மிஸ் தமிழ்நாடு அழகியான அந்த இளம் பெண்ணிடம், ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மிகவும் அக்கரையோடு இருப்பதாக காட்டிக்கொண்டு, கூடவே இருந்து நன்றாக பார்த்துக்கொண்டு தனது கட்டுப்பாட்டிற்குள் அந்த அழகியை கொண்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக, “வீட்டிற்குள் உள்ள சாத்தானை விரட்டுவதற்கு 40 நாட்கள் வரை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறி, சிறப்பு பிராத்தனை செய்து உள்ளார். 

ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து, லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர். 

அதன் பிறகு, ஆண்ட்ரூஸ் கால்டுவெல் அவரது வீட்டாரிடம் “நான் மிஸ் தமிழ்நாடு அழகியை விரும்புவதாக கூறியிருக்கிறார். 

அதன் பிறகு, அந்த அழகியின் வீட்டாரும், இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்து, “இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக” கூறி உள்ளனர்.

அத்துடன், “ஆண்ட்ரூஸீற்கு வயது அதிகமாக இருக்கும் போலயே?” என்று, அவரது வீட்டாரிடம் அந்த பெண் கேட்டு உள்ளார். 

அதற்கு அவரது வீட்டார்கள் “இவருக்கு 42 வயது தான் ஆகிறது என்றும், அதிக நேரம் வெயிலில் பணி புரிவதால் அப்படி தெரிகிறது” என்றும், அவர்கள் கூறி, சமாளித்து வந்திருக்கிறார்கள். 

மேலும், “அந்த அழகியிடம் இருந்து அவருக்கு சொந்தமான சொத்து பத்திரங்கள், நகைகள், வங்கி கணக்கில் இருந்த பணம் என ஒவ்வொன்றாக சாமார்த்தியமாக ஆண்ட்ரூஸ் கைப்பற்றிக் கொண்டதாகவும், அவர் குடியிக்க அந்த பகுதியில் வாடகை வீடு ஒன்றை பார்த்து அந்த பெண்ணை அங்கு தங்க வைத்ததாகவும்” கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் தான், இந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ்சின் ஆதார் கார்டு, அந்த அழகியின் கையில் கிடைத்து உள்ளது. 

அதில், “ஆண்ட்ரூஸ் ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருவதும், அவருடைய உண்மையான வயது 56 என்பதும், தெரிய வந்துள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த அழகி, அந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் வசிக்கும் பகுதிக்குச் சென்று விசாரித்து உள்ளார். அப்போது, அவர் உதவி ஆய்வாளர் இல்லை என்பதும், அவர் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆக பணி புரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த அழகி, “தன்னிடம் வயது குறைவு” என்று கூறி, நம்ப வைத்து ஏமாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது கடந்த வருடம் நவம்பர் மாதம், அங்குள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், போலீசார் இருவரிடம் விசாரணையை நடத்தி வந்த நிலையில், இந்த விசாரணையில் “சிறப்பு உதவி ஆய்வாளரான ஆண்ட்ரூஸ் கால்டுவெல், தனது வயதை குறைத்து அந்த பெண்ணை ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் வென்ற பெண்ணிடம் யூத்தாக நடித்து ஏமாற்றிய 56 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் மீது கடந்த மாதம் 27 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், அவர் மீது தற்போது வரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. இந்த புகார், தற்போது காவல் துறையின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.