முதல் மனைவி இருக்கும் போதே, வீட்டை விட்டு வெளியேறி 2 வது திருமணம் செய்து ரகசியமாக வாழ்ந்து வந்த கணவனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை குன்றத்தூர் அடுத்து உள்ள நத்தம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஜெயப் பிரகாஷ் என்பவர், அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.

அப்போது, கடந்த 2020 ஆம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த 35 வயதான மேத்தாவுக்கும்,  38 வயதான ஜெயப் பிரகாஷ்கும் இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.

ஆனால், இவர்களுக்கு திருமணமான நடந்த அடுத்த சில மாதங்களிலேயே “வாழ பிடிக்கவில்லை” என்று கணவன் ஜெயபிரகாஷ் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கணவன் ஜெயபிரகாஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து வீட்டை விட்டும் சென்றதாகவும் கூறப்படுகிறது.

எனினும், அவரது மனைவி கணவன் வீட்டிலேயே வாழ்ந்து வந்த நிலையில், மகன் வீட்டை விட்டு சென்ற கோபத்தில் அவரது மனைவியை அவரது மாமனார் மற்றும் மாமியார் கொடுமை படுத்தி வந்ததாகவும், இதனால் அவரது மனைவி கோபத்தில் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டதாகவுமு் கூறப்படுகிறது.

இதனையடுத்து, வீட்டை விட்டு மாயமான தனது கணவரை கண்டுபிடித்துத் தருமாறு சென்ன குன்றத்தூர் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்திருக்கிறார்.

ஆனால், அதே நேரத்தில் அங்குள்ள பக்கத்து ஏரியாவான சிறுகளத்தூரைச் சேர்ந்த சண்முக பிரியா என்ற பெண்ணும், வீட்டிலிருந்து மாயமாக உள்ள புகாரும் காவல் நிலையத்திற்கு வந்து உள்ளது.

இதனால், வீட்டிலிருந்து மாயமான இருவரையும் குன்றத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

ஆனால், இந்த புகார் குறித்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மாயமான கணவன் ஜெயப் பிரகாஷை கண்டுப்பிடித்த தரக்கோரி அவரது மனைவி மேத்தா, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தார்.

இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ் மற்றும் அவருடன் வேலை செய்து வந்த சண்முகபிரியா ஆகிய இருவரையும் போலீசார் கண்டு பிடித்தனர். 

இவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், “சண்முக பிரியாவை, ஜெயபிரகாஷ் 2 வது திருமணம் செய்து ரகிசயமாக வாழ்ந்து வருவது தெரிய வந்தது. அத்துடன், இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருப்பதும்” விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்பாக, “வீட்டில் முதல் மனைவி இருக்கும் போதே, அந்த மனைவிக்குத் தெரியாமல் கணவன் ஜெய பிரகாஷ், 2 வது திருமணம் செய்து கொண்டதால், ஜெய பிரகாஷின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் என்னை வரதட்சனை கொடுமை செய்ததாகவும்” அவரது மனைவி மேத்தா, புகார் அளித்தார். 

இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், “கணவன் ஜெயபிரகாஷ் அவரது தாய் - தந்தை மற்றும் அவரது உறவினர்கள் என 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து”  குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்மந்தப்பட்ட கணவன் ஜெய பிரகாஷை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.