தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக, சிறந்த நடிகராக, சிறந்த தயாரிப்பாளராகவும் விளங்கும் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பாலா உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் இணையும் நடிகர் சூர்யா தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் விஸ்வாசம் & அண்ணாத்த படங்களின் இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும், சூரரைப் போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்திலும் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் சூர்யா.

இதனிடையே இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில், பிரியங்கா அருள்முருகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தமிழக திரையரங்க ரிலீஸ் உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.