தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம்  கம்பீர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

gautham

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர் கவுதம் கம்பீர். இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தற்போது மக்களவை எம்.பி.யாக பதவகித்துள்ளார். அவர் கிரிக்கெட், அரசியல் என அவ்வப்போது இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக தற்பொழுது  கவுதம் கம்பீர்  உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்,  டெல்லியில் வசித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இன்று காலை திடீரென டெல்லி காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தனக்கு இன்று மின்னஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

இதனையடுத்து அங்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள்,  உடனடியாக கவுதம் கம்பீரின் இல்லத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து  போலீசார் தீவிர விசாரணையும்  நடத்தி வருகின்றனர்.

மேலும் கம்பீர் போட்ட இரண்டு  ட்வீட்களால் தான் தற்போது கொலை மிரட்டல் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது மூத்த சகோதரர் போன்றவர் என தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்த கவுதம் கம்பீர், முதலில் உங்களின் வீட்டில் இருந்து யாரையேனும் எல்லைக்கு அனுப்பி பாருங்கள் என்றும்  அதன் பிறகு தீவிரவாத நாட்டின் தலைவரை சகோதரர் என்றுக் சொல்வீர்களா என்று நான் பார்க்கிறேன் எனபதிவிட்டுருந்தார்.

அதனைத்தொடர்ந்து இதே போல பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமான படை கேப்டன் அபிநந்தனுக்கு சமீபத்தில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. அப்போது அவரின் புகைப்படத்தை பதிவிட்டு, தனது சகோதரர் இவர் என கம்பீர் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டு விஷயங்கள் தான் தற்போது ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததற்கு காரணம் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.