கத்தி முனையில் டாக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 25 லட்சம் ரூபாய் பணம், 275 பவுன் தங்க நகைகள், கார் உள்ளிவைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கத்தி முனையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம், தமிழகத்தில் அதுவும் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் நடந்திருக்கிறது.
 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தாராபுரம் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் சக்திவேல் என்பவர், டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆன நிலையில், இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். அத்துடன், டாக்டர் சக்திவேல் தனது மனைவி மற்றும் தனது குடும்பத்தினர் மொத்தம் 4 பேருடன் வசித்து வருகிறார்.

இந்த சூழலில் தான், டாக்டர் சக்திவேல், தனது மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் உடன் நேற்று நள்ளிரவு தங்களது வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வீட்டிற்குள் நள்ளிரவில் நேரத்தில் அத்து மீறி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, கத்தியை காட்டி மிரட்டி கத்தி முனையில் டாக்டர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி ராணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 4 பேரையும் கட்டிப்போட்டு உள்ளனர்.

இதனையடுத்து, அந்த அவர்களது வீட்டின் பீரோவில் இருந்த 25 லட்ச ரூபாய் ரொக்க பணம், 275 பவுன் தங்க நகைகளையும் அந்த மர்ம கும்பல் கத்தி முனையில் கொள்ளை அடித்து உள்ளனர். 

அத்துடன், அந்த வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டாக்டரின் காரையும், அந்த மர்ம கும்பல் அதிரடியாக கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

பின்னர், கொள்ளை கும்பல் தப்பிச் சென்ற நிலையில், இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அத்துடன், “இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில கொள்ளை கும்பலா? அல்லது உள்ளூர் நபர்களா? அல்லது டாக்டர் குடும்பத்திற்கு தெரிந்த நபர்களா?” என்கிற கோணத்தில் போலீசார் மிகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் குறித்து மொத்தம் 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இனையடுத்து, தனிப்படை போலீசார் தங்களது பாணியில் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளனர்.

சினிமாவில் நடைபெறுவது மாதிரியான கொள்ளை சம்பவம், திண்டுக்கல்லில் நிஜயத்தில் நடந்துள்ள அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.