டீல் பேசி கள்ளக் காதல் உறவில் இருந்து வந்தவர்கள் திடீரென்று இருவருமாக சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும், தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை பெரியமேடு அடுத்து உள்ள சூளை நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயதான சந்தீப் ஜெயின் என்ற நபர் வசித்து வருகிறார். 

இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

அதே 6 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த இளைச்சி என்ற பெண்ணும், திருமணம் ஆன நிலையில், தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

அப்படியான தருணத்தில் தான், இருவரும் தங்களது துணையை பிரிந்து தவித்த நேரத்தில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டு அறிமுகம் ஆகி உள்ளனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, அவர்கள் இருவரும் டீல் பேசிக்கொண்டு, திருமணம் செய்யாமல் ஒன்றாக ஒரே வீட்டில் வாழத் தொடங்கி உள்ளனர்.

இப்படியாக, இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல், கடந்த 6 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்து உள்ளார்கள்.

இந்த நிலையில் தான், கள்ளக் காதலர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அந்த பெண் சமீபகாலமாக ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுடன் காதல் வயப்பட்டு, அந்த இளைஞரையே திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்த சந்தீப், “என்னை விட்டு பிரிய கூடாது” என்று, அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். பிறகு, இந்த பிரச்சனை அவர்களுக்குள் சண்டையாக மாறி உள்ளது.

ஆனாலும், அந்த பெண் தனது கள்ளக் காதலனை விட்டு பிரிந்து போவதில் உறுதியாக இருந்து உள்ளார்.

அப்போது, கள்ளக் காதலர்கள் இருவருக்குள்ளும் மீண்டும் சண்டை வந்த நிலையில் அந்த பெண் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு, உள்ளார். இதில், தீ உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த சந்தீப் ஜெயினும், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு, தீ வைத்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். 

அப்போது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர் மீதான தீயை அணைத்து, அவரை அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அவர், தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.