சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக கலக்கி வருபவர் ப்ரியங்கா குமார்.தனது மீடியா வாழ்க்கையை மாடல் ஆக தொடங்கிய ப்ரியங்கா ஆல்பம் பாடல்கள்,விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ப்ரியங்கா.அடுத்ததாக சீரியலில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.

கன்னடத்தில் ஒளிபரப்பான கிருஷ்ணா துளசி சீரியலில் நடித்து நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார் ப்ரியங்கா.இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையிலும் தனது என்ட்ரியை கொடுத்தார் ப்ரியங்கா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் ப்ரியங்கா குமார்.இந்த தொடரில் இவரது நடிப்பின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகையாக மாறினார் ப்ரியங்கா.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இவர் சில படங்களிலும் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது இவர் நடித்துள்ள addhuri லவ்வர் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர்.பெரிய திரையில் கால்பதிக்கும் ப்ரியங்காவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக ப்ரியங்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.