மது போதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை, அவரது மனைவி சுத்தியலால் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை ஓட்டேரி வாழைமா நகர் 9 வது தெருவை சேர்ந்த 43 வயதான பிரதீப் என்பவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு, திருமணமாகி 41 வயதில் பிரீத்தா என்ற மனைவி உள்ளார். 

அத்துடன், பிரதீப் - பிரீத்தா தம்பதிக்கு, 20 வயதில் ஸ்ரீகீர்த்தி என்ற மகளும், 10 வயதில் கௌதம் என்ற மகனும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் படித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் தான், மது போதைக்கு அடிமையான 43 வயதான பிரதீப், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 

மேலும், மது போதைக்கு கடுமையாக அடிமையான பிரதீப், வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் இருக்கும் மனைவியுடன் தினமும் சண்டை போட்டு வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எப்போதும் போல் 43 வயதான பிரதீப், நேற்று இரவு குடித்துவிட்டு நல்ல மது போதையில் வீட்டிற்கு வந்து உள்ளார்.

அப்போது, வீட்டில் பிரதீப்பின் மனைவி சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்த நிலையில், இவர்களது 20 வயதான மகள், அவரது தனி ரூமில் படித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது, மகள் ரூமிற்குள் நுழைந்த தந்தை பிரதீப், தான் பெற்ற மகள் என்றும் பார்க்காமல், தனது மகளிடம் அத்து மீறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், அலறி துடித்து உள்ளார்.

இப்படியாக, அலறி துடித்த மகளின் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த அவரது தாயார் பிரீத்தா, தங்களது மகளிடம் தனது கணவர் இப்படி அத்து மீறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுக்கொண்டிருப்பதைக் பார்த்து கடும் அதிர்ச்சிடைந்து உள்ளார்.

மறுகணமே, தனது கணவனிடமிருந்து தனது மகளை மீட்க அந்த தாயார் கடுமையாக போராடி உள்ளார். 

இதனால், கணவன் - மனைவி இடையே அப்போது பெரும் சண்டை நடந்து உள்ளது. அந்த நேரத்தில், கணவனின் இந்த செயலால் கோபத்தில் உச்சத்தில் இருந்த அவரது மனைவி பிரீத்தா, வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து கணவர் பிரதீப்பின் மண்டையில் பலமாக அடித்து தாக்கி உள்ளார். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் பிரதீப், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன் வீட்டில் நடந்த சண்டை குறித்து அங்கு அக்கம் பகத்கதினர் கூடிய நிலையில், இது தொடர்பான செய்திகள் வெளியே கசிந்த அடுத்த சில நிமிடங்களில் கணவனை கொலை செய்த மனைவி பிரீத்தி, இது குறித்து தனது உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கூறி உள்ளார்.

இதனையடுத்து, அங்கு வந்த உறவினர்கள் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு இது தொடர்பாக தகவல் கூறி உள்ளனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிரதீப் சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவனை கொலை செய்த அவரது மனைவி பிரீத்தாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அத்துடன், பாதிக்கப்பட்ட மகள் மற்றும் அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.