இந்திய திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இந்தியாவின் பல்வேறுமொழிகளின் திரை உலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. முன்னதாக நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக விரைவில் ரிலீசாக இருக்கிறது மஹா திரைப்படம். இயக்குனர் U.R.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்திருக்கும் மஹா திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ் படத்திலும் மை நேம் இஸ் ஸ்ருதி படத்திலும் நடித்துள்ள ஹன்சிகா நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் பார்ட்னர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.மஹா,105 மினிட்ஸ் & பார்ட்னர் இம்மூன்று படங்களும் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளன. இதனிடையே இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் உருவாகும் ரவுடிபேபி படத்தில் நடித்து வருகிறார்  ஹன்சிகா. 

அடுத்ததாக வாலு, ஸ்கெட்ச் & சங்கத்தமிழன் ஆகிய படங்களின் இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பாளராக தனது ஃபிலிம் வொர்கஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் படமாக  உருவாகும் புதிய திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) பூஜையுடன் தொடங்கிய இந்த புதிய திரைப்படத்தை சபரி கிரீசன் மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்குகின்றனர். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் மூவரும் இணைந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இத்திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.