ஆன்லைன் காதலனுடன் வாழ ஆசை.. ஆள் வைத்து கணவனை கொன்ற கொடூர மனைவி!

ஆன்லைன் காதலனுடன் வாழ ஆசை.. ஆள் வைத்து கணவனை கொன்ற கொடூர மனைவி! - Daily news

திருமணம் ஆக பல ஆண்டுகள் தனது கணவனுடன் வாழ்ந்து வந்த பெண், தனது ஆன்லைன் காதலனுடன் வாழ ஆசைப்பட்டு ஆள் வைத்து தனது கணவனை கொடூரமாக கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டெல்லியில் ஒரு பட்டறை உரிமையாளராக மொய்னுதீன் குரேஷி என்பவர், தொழில் செய்து வருகிறார். 

எனினும், மொய்னுதீன் குரேஷிக்கு, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த ஜீபா என்பவருடன் திருமணம் நடந்து உள்ளது.

திருமணத்திற்கு பிறகு, இவர்கள் இருவரும் சந்தோசமாகவே வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள்  என்று மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த சூழலில் தான், மனைவி ஜீபாவுக்கு தற்போது 40 வயதாகும் நிலையில், அவர் எந்நேரமும் சமூக வலைத்தளத்தில் மூழ்கியே கிடந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அப்படியான தருணத்தில், ஜீபாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் 27 வயதேயான சோயப் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் பழக ஆரம்பித்தனர். 

இப்படியாக, இவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து பழகியதால், ஜீபாவுக்கு சோயப்பு மீது காதல் வந்த நிலையில், இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சோயப்பிற்கும் அந்த பெண்ணை ரொம்பவும் பிடித்துப் போகவே, அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு புதிதாக வாழ்க்கை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

ஆனால், இதற்கு அந்த பெண்ணின் “கணவர் மொய்னுதீன் குரேஷி இடையூறாக இருப்பா” என்று கூறி அவரை கொலை செய்ய வேண்டும்” என்று, தனது ஆன்லைன் காதலன் சோயப்பிடம், அந்த கொடூர மனைவி ஜீபா கூறியிருக்கிறார். 

அப்போது, “என்னால் கொலை செய்ய இயலாது” என்று, அந்த காதலன் சோயப் மறுத்த நிலையில், “வேறு யாரிடமாவது பணம் கொடுத்து குரேஷியை கொலை செய்யலாம்” என்று, காதலன் சோயப் கூற இருக்கிறார். இதனை, ஜீபாவும் ஏற்று உள்ளார்.

இதனையடுத்து, “அங்குள்ள வினித் கோஸ்வாமி என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து, குரேஷியை கொலை செய்யுமாறு சோயப் - ஜீபா ஜோடி கூறியிருக்கிறார்கள்.

அதன்படி, கடந்த 17 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் தர்யாகஞ்ச் பகுதியில் குரேஷியை சுட்டுக் கொலை செய்து விட்டு, வினித் கோஸ்வாமி அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளார். 

பின்னர், இந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் 500 க்கும் மேற்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், “மனைவியே ஆள் வைத்து அந்த அப்பாவி கணவனை கொலை செய்த சதித் திட்டம் தீட்டியது” அம்பலமானது.

இதனையடுத்து, கணவனை ஆள் வைத்து கொன்ற மனைவி ஜீபா குரேஷி, அவரது ஆன்லைன் காதலன் சோயப், கொலையாளி வினித் கோஸ்வாமி ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில், ஆன்லைன் காதலனுடன் வாழ்வதற்காக 6 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, மனைவியே ஆள் வைத்து கணவனை கொலை செய்த சம்பவம், மெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment