“இந்தியாவில் நிலவும் மதப் பிரச்சனையில் ஐ.நா தலையிட வேண்டும்” என்று, வலியுறுத்திய இஸ்லாமிய கூட்டமைப்புகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா என்ற பெண், சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றி ஒரு டிவி விவாதத்தில் பங்கேற்று பேசிய போது, முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, நபிகளை கடுமையாக விமரச்னம் செய்திருந்திருந்தார்.

இதனைக் கண்டித்து கான்பூரில் இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த போராட்டத்தில் இரு தரப்பினருக்கு இடையே மத மோதல் வெடித்தது. இதனால், அமைதிக்கு பெயர் போன இந்தியா, கலவர பூமியாக மாறிப்போனது. இவற்றுடன், பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர், தனது டிவிட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதன் காரணமாகவும், இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்து கிளம்பியது.

இதனால், நுபுர் சர்மாவின் கருத்துக்கு இந்தியா முழுவதும் மிக கடும் கண்டனங்கள் எழுந்தது. இதன் காரணமாக, பாஜவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்திற்கு எதிராக ஒன்று திரண்ட உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும், “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, ஒட்டுமொத்தமாக போர்கொடி தூக்கியதுடன், இந்தியாவிற்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது, இந்தியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அத்துடன், 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பான ஓஐசி, “இந்தியாவில் மதப் பிரச்சனை தொடர்பாக ஐநா தலையிட வேண்டும்” என்று, ஐநாவுக்கு கோரிக்கை வைத்தது. 

இதனால், கடும் அதிரச்சி அடைந்த இந்தியா, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்தில், “நபிகள் நாயகத்திற்கு எதிரான சர்ச்சையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்றும், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக எதிர்க்கிறது” என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது.

அதாவது, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு என்பது உலகில் உள்ள 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாக திகழ்கிறது. 

இந்த அமைப்பானது, இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல், பொருளாதாரம், வணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலேயே, இந்த கூட்டமைப்பு ஒருணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது, இந்த அமைப்பிக்கு தான் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அதே நேரத்தில், நபிகர் சர்ச்சையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் செரீப் கூறியுள்ள கருத்தில், “இந்தியாவை தற்போது ஆட்சி செய்யும் கட்சி இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தை நசுக்குவதாகவும், உலக நாடுகள் இதனை கவனத்தில் கொண்டு இந்தியாவை கண்டிக்க வேண்டும்” என்றும், ” குற்றம்சாட்டி வலியுறுத்தி இருந்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த இந்தியா, “பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அகமதியர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு உலக நாடுகளே சாட்சி” பதிலடி கொடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.