திருமணம் செய்வதாக கூறி, டைவர்ஸ் ஆன இளம் பெண்ணை கல்யாணத்திற்கு முன்பே ஒரு இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்து மோசடியாக ஏமாற்றிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் 28 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். 

அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், 2 பிள்ளைகள் உள்ளனர்.

ஆனால், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த பெண் தனது கணவனை விட்டு பிரிந்து, தனது கணவரை அவரை முறைப்படி விவகாரத்து செய்து விட்டு தனியகா வசித்து வந்தார்.

இந்த சூழலில் தான், கணவனை பிரிந்து தனியாக கஷ்டப்பட்டு வந்த அந்த பெண்ணிற்கு, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து உள்ளது. 

இதனையடுத்து, அந்த பெண் குறிப்பிட்ட அந்த தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். 

அப்போது, அந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாகிப் அகமது குரேஷி என்ற நபருடன், இந்த பெண்ணுக்கு அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் பழகி வந்து உள்ளனர்.

இவர்களுக்கு இடையிலான இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
 
இதனால், அவர்கள் இன்னும் நெருக்கமாக பழகத் தொடங்கி உள்ளனர். அப்போது, காதலன் சாஹிப், அந்த பெண்ணை “கல்யாணம் செய்து கொள்வதாக” வாக்குறுதி கொடுத்து, அந்த பெண்ணுடன் பல முறை உல்லாசம் அனுபவித்து வந்தார் என்றும், கூறப்படுகிறது. 

இதனால், இருவரும் கல்யாணம் செய்துக்கொள்ள கடந்த 2020 ஆம் ஆண்டு, ஒரு தேதியைப் பார்த்து முடிவு செய்து உள்ளனர். அந்த நாளில், அந்த பெண் அவருக்காக காத்திருந்த போது, காதலன் சாஹிப் வராமல் ஏமாற்றி விட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார்.

அதன் பிறகு, அந்த காதலன் சாஹிப் அந்த பெண்னின் போனை எடுக்காமல், அவருடன் இருந்த பழக்க்கத்தை முறித்து கொண்டதுடன், அந்த பெண்ணை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். 

இதனால், பாதிக்கப்பட்ட அந்த பெண், தன்னை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு மோசடி செய்த சாஹிப் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மோசடியாக ஏமாற்றிய சாஹிப் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.