ஆன்லைன் மூலம் பல வழிகளில் மோசடியில் ஈடுபடும் நைஜீரிய கும்பலை, உத்திரபிரேதேசத்தில்குமரி போலீசார் வளைத்து பிடித்தனர்.

cybercrime

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல்நிலையத்திற்கு உட்பட காப்பிகாடு பகுதியை சேர்ந்த மூதாட்டியின் 17 வயது பேத்தியிடம், சமூக வலைதளங்கள் மூலம் மோசடி கும்பல் தொடர்பு கொண்டது.
தான் பெண் என்றும், அமெரிக்காவில் வசிக்கும் கணவருக்கு புற்றுநோய் இருப்பதால், அவர் வெளிநாட்டில் இருப்பதால் எனக்கு இருக்கும் கோடிகண்கான சொத்துகளை ஆதரவற்ற இந்தியர்களுக்கு கொடுக்க முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் மூலம் பணத்தை அனுப்பி வைப்பதாக கூறி அதற்கான ஆவணங்கள் சரிசெய்ய, வெளியுறவுத்துறை கோப்புகளுக்காக என கூறி பல முறை ஒரு லட்சம், மூன்று லட்சம், ஐந்து லட்சம் என மோசடி செய்துள்ளனர். பல போலி ஆவணங்கள் அனுப்பி வைத்து, அந்த பணத்தை ரிசர்வ் வங்கியில் இருந்து பெற 51 லட்சம் வரை வசூல் செய்துவிட்டதை உணர்ந்த பாட்டியும், பேத்தியும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததன் பேரில், குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பல போலி மெயில்கள் வருவதை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து வந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு எபிகோபிரான்சிஸ் என்பவனை கைது செய்தனர். இவனோடு தொடர்புடைய கும்பல் தப்பி சென்றது. இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நெட்வொர்க் என்பதும், பல போலி மெசேஜ், மெயில்கள் தயார் செய்து லாட்டரி பரிசு, அதிர்ஷ்டம் என சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற கவர்ச்சி, அதிர்ஷ்ட விளம்பர மெசேஜ், மெயில் சமூக வளைதள விளம்பரங்களை நம்பி ஏமாந்தால் என்ன நடக்கும். சமூக வளைதளங்களில் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.