2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல்.

budget2022

2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை அவர் பட்டியலிட்டு பாராட்டினார். அவரைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவையில் மத்திய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, காகிதமில்லாத டிஜிட்டல் முறையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது மத்திய பட்ஜெட் இதுவாகும் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த பட்ஜெட் உரையில்,வருமான வரி வரம்பு உயர்வு,வீட்டு லோன் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:
• பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ₹48,000 கோடி, வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன.
• ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
• தொலைபேசி மூலம் கவுன்சிலிங்க் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும்
• ஊரக மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கோவிட் பாதிப்பு காரணமாக இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்க முடிவு.
• ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகின்றது.
• தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும்.
• டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும்.
• மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும்.
• இந்தியாவில் உட்கட்டமைப்புகளை உலகத் தரத்தில் மேம்படுத்துவதில் அரசு உறுதியுடன் உள்ளது.
• நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
• காவிரி - பெண்ணாறு இணைப்பு திட்டம் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுக்கு பின் நிறைவேற்ற நடவடிக்கை.
• கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.
• சிறுகுறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் மார்ச் 2023ம் ஆண்டு வரை நீட்டிப்பு.
• இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.
• குடிமக்களின் வாழ்க்கை தரத்தை வலுப்படுத்துவதே இந்த அரசின் முதன்மையான நோக்கம்.
• விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் அளவு அதிகரிக்கப்படும்.
• 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்.
• நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது.
• நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27% ஆக இருக்கும் என கணிப்பு.
• One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்.
• இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்.
• அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிப்பு.
• வெளிப்படைத் தன்மையுடன் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
• ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது.
• சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டில் நாம் இருந்தாலும், நமது இலக்கு இந்தியா 100 என்பதுதான்.
• தற்சார்பு இந்தியா திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
• சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதை கொள்கையாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
• மேக் இன் இந்தியா திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
• அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
• ஆத்ம நிபார் பாரத் திட்டத்திற்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரி செய்து வருகிறோம்.
• நிதி உள்ளடக்கம் மற்றும் நேரடி பணப் பயன் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலமாக நாட்டின் ஏழை மக்களுக்கு சேவை புரிய அரசு எண்ணம் கொண்டுள்ளது.
• ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
• தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தியதால் பொருளாதார வளர்ச்சி சாத்தியமானது.
• உலகின் பெரிய நாடுகளில் இந்தியாவே மிக வேகமாக பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.
• பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.