அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, உருகி உருகி காதலித்து வந்த தம்பியை, அண்ணன் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே டவுன் மகாலட்சுமி லே அவுட் பகுதியில் உள்ள ஹரி ஹராவை சேர்ந்த இப்ராகிம் என்ற இளைஞர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு தம்பி ஒருவர் இருக்கிறார்.

இப்படியா சூழலில தான், இப்ராகிமிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.

அத்துடன், வரும் மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டு பெரியவர்களால் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இதனால், திருமண நடத்துவதற்கான வேலைகளில் இரு வீட்டாரின் பெற்றோரும் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் தான், அண்ணன் இப்ராகிமிற்கு நிச்சயம் செய்யப்பட்ட அந்த இளம் பெண்ணை, இப்ராகிமின் தம்பி அல்தாப், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

அத்துடன், “நாம் காதலித்த பெண், தனக்கு அண்ணியா வரபோறதை நெனச்சி அவர் தினமும் உருகி உருகி பேசி வந்தார்” என்றும், கூறப்படுகிறது. இப்படியான காதல் விசயம் தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்த காதல் கதை சம்மந்தப்பட்ட மாப்பிள்ளையும், அண்ணனுமான இப்ராகிமிற்கு தெரிய வந்து உள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கல்யாண மாப்பிள்ளையான அண்ணன் இப்ராகிம், “தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட அந்த பெண் எங்கே தனக்கு கிடைக்காமல் போய்விடுவாரோ?” என்று பயந்து உள்ளார்.

மேலும், “தனக்கு வரப்போகும் பெண்ணை, தனது தம்பி கூட்டிக்கொண்டு ஓடி விடுவாரோ” என்றும், தம்பி அல்தாப் மீது சந்தேகம்” அடைந்து உள்ளார். 

ஒரு கட்டத்தில், தம்பி மீதான இந்த சந்தேகம் அவரை கொலை செய்யவும் இப்ராஹிமை தூண்டி விட்டு உள்ளது. இதனால், தனது தம்பியை கொலை செய்யவும் ஒரு முடிவு செய்தார்.

அதன் படி, கடந்த 18 ஆம் தேதி அன்று தனது தம்பியை, அண்ணன் இப்ராகிம் அவரது கழுத்தை அறுத்து மிகமும் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார்.

இதனையடுத்து, தம்பியின் உடலை மறைத்து வைத்துவிட்டு, அவர் வீட்டிற்கு வந்து உள்ளார்.

ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த கொலை குறித்த சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், தம்பியை கொன்ற இப்ராஹீமை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.