கடந்த சில மாதங்களாக இளவரசர் பிலிப் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த நிலையில்  இன்று காலமானார். 


மூன்று வருடங்களுக்கு முன்பு அரச பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார். வயது முதிர்வு காரணம்  அரச பணிகளிலிருந்து முழுமை யாக ஓய்வு பெறுகிறார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இவருக்கு பிறகு இங்கிலாந்து ராணி எலிசபெத் தொடர்ந்து தனது அரசுப் பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப். 


கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பிலிப் உயிர் பிரிந்துள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.