நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்றும், சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

அதை பார்த்த ரசிகர்கள் பதறிப் போனார்கள். எப்பொழுதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராதிகா, இரண்டு நாட்களாக அந்த பக்கம் வரவே இல்லையே. அதற்கு காரணம் கொரோனா தானா என ரசிகர்களும், ரசிகைகளும் பதட்டம் அடைந்தார்கள். மேலும் ராதிகா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகை ராதிகா செய்த பதிவில், அனைவரின் அன்புக்கும் நன்றி. எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் இல்லை. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உடம்பு வலி மட்டுமே. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன. நாங்கள் மேல் நீதிமன்றங்களில் முறையிடுவோம். நான் வேலைக்கு திரும்பிவிட்டேன் என பதிவு செய்துள்ளார். 

செக் மோசடி வழக்கில் ராதிகா மற்றும் அவரின் கணவர் சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்து தான் ராதிகா தன் ட்வீட்டில் தெளிவாக விளக்கமளித்து பேசியிருக்கிறார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்திருந்தது. ராதிகாவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. 

தமிழ் சினிமாவில் முன்னணி திரை நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார். இவர்கள் மீது இப்படி ஒரு புகாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.