சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு அடுத்ததாக சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த சில மாதங்களாக கொரானா தொற்று காரணமாக ஓய்வில் இருந்த சூர்யா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கு பெற்று நடித்து வருகிறார். 

சூர்யா தயாரித்த கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தின் மூலம் சூர்யாவின் மனதை கவர்ந்த இயக்குனராக மாறியவர் பாண்டிராஜ். அதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனராகவும் மாறிவிட்டாராம் பாண்டிராஜ். பாண்டிராஜ் இயக்கும் படங்கள் அனைத்துமே கமர்ஷியலாக வெற்றி பெறுவதால் கையோடு வைத்துக்கொண்டது சன் பிக்சர்ஸ்.

அந்த வகையில் தற்போது பாண்டிராஜ் சூர்யா 40 படத்தை இயக்கி வருகிறார். சூர்யா இல்லாமல் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது உடல்நிலை சரியாகி மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் சூர்யா40 படத்தில் கலந்து கொண்டுள்ளார் சூர்யா.

முதலில் கையில் துப்பாக்கி வைத்திருப்பது போல வெளியான போஸ்டரை தொடர்ந்து தற்போது கையில் வாலை வைத்துக்கொண்டு நடந்து செல்லும் சூர்யாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. வாலுடன் கம்பீரமாக சூர்யா நடந்து செல்லும் இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இமான் இசையமைக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதுவரை சூர்யா இந்த மாதிரி முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அதன் புகைப்படங்களை வெளியிட்டதில்லை. இதன் காரணமாகவே இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல்நிலை சரியானதற்கு பிறகு நடிக்கும் முதல் படம் என்பதால் கூடுதல் சந்தோஷத்தில் உள்ளாராம்.

சூர்யா40 திரைப்படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தயாராகி வருகிறது. சூர்யா மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் படம் கண்டிப்பாக சூர்யாவின் சினிமா மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா கைவசம் நவரசா ஆந்தாலஜி உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ஆந்தாலஜியின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது.