கோயிலுக்குள் வைத்து பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை மாவட்டம் நாகதோப்பு அருகே உள்ள காமராஜர் காலனியில் கணவனை இழந்த பெண் ஒருவர், அந்த பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி வந்தார்.

அத்துடன், அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட கோயிலில் கட்டடப் பணிக்கு அந்த பெண் சென்று வந்துள்ளார். வழக்கம் போல், நேற்று பணியை முடித்துக்கொண்டு, இரவு நேரத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு அந்த பெண் திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது, அந்த குறிப்பிட்ட சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அந்த பெண்ணை சிலர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனை பெரிதுபடுத்தாமல், அந்த பெண் தனியாக நடந்து வந்துகொண்டிருந்துள்ளார். அப்போது, பின் தொடர்ந்து வந்தவர்கள், அந்த பெண்ணை திடீரென்று வழி மறித்து, அந்த பெண்ணின் வாயைப் பொத்தி அங்குள்ள காமாட்சி அம்மன் கோயில் உள்ளே இழுத்துச் சென்று உள்ளனர்.

காமாட்சி அம்மன் கோயிலுக்குள், அந்த பெண்ணை இழுத்துச் சென்றதும், அந்த பெண்ணை கடுமையாகத் தாக்கி, அந்த பெண் அன்று கூலி வேலைப் பார்த்து வாங்கி வந்த அன்றைய நாள் சம்பளத்தையும் அப்படியே பறித்துக்கொண்டனர். 

முக்கியமாக, அந்த பெண்ணை அவர்கள் மாறி மாறி தொடர்ச்சியாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மிக முக்கியமாக, கோயிலுக்குள் நேற்றிரவு 9 மணிக்கு அந்த பெண்ணை இழுத்துச் சென்று அவர்கள், அதிகாலை 2 மணிக்கு தான் அந்த பெண்ணை விடுவித்து உள்ளனர்.

அத்துடன், “இது குறித்து வெளியே சொன்னால், உன்னைக் கொன்று விடுவோம்” என்றும், மிக கடுமையாக அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

இதனால், உயிர் பிழைத்தால் போதும் என்று பயந்துபோய் வீடு திரும்பிய அந்த பெண், வீட்டில் வந்து தனது சகோதரியிடம் இந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து கூறி கதறி அழுதுள்ளார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று, அவர்கள் முடிவு செய்திருந்த நேரத்தில், இந்த தகவலை எப்படியோ கேள்விப்பட்டு, அவர்கள் வீட்டிற்கே வந்து மிரட்டி விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் பயந்துபோன அந்த பெண், உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வண்டிப்பேட்டையைச் சேர்ந்த அருண்ராஜ், தாமரைகுளத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய இரு இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பிறகே அடுத்துக் கட்ட நடவடிக்கை குறித்துத் தெரியும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அங்குள்ள அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். அங்கு, அந்த பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.