இந்து என்ற ஒற்றை சொல்லில் எல்லோரையும் மயக்கி கட்டுக்குள் கொண்டுவர பார்க்கிறார்கள் என்று விசிக தலைவர் பேசியுள்ளார். 
 
திராவிடர் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ குல தெய்வ வழிபாட்டையும் பெருதெய்வ வழிபாடாக மாற்றிவிட்டார்கள். குலதெய்வ வழிபாடும் சனாதன மயமாகி வருகிறது.

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் என்றால், விநாயகர் எப்படி இந்திக்கடவுளாக முடியும்? முருகன் தமிழ்க்கடவுள் என்கிறார்கள், முருகன் தமிழ் கடவுள் எனும் வழுக்குப்பாறையில் கால்வைத்தால், அது சனாதனம் என்ற படுகுழியில்தான் தள்ளிவிடும். தைப்பூசத்துக்கு மட்டும் விடுமுறை விட்டுவிட்டால், தமிழர்கள் எல்லாம் தலைநிமிர்ந்து விடுவார்களா? இந்து என்ற ஒற்றை சொல்லில் எல்லோரையும் மயக்கி கட்டுக்குள் கொண்டுவர பார்க்கிறார்கள்” என்று பேசினார்.