கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தளர்வுள்ள மாவட்டங்களில் என்னென்ன இயங்கும்? என்ன இயங்காது? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

“தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முக்கியமாக, கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள், குறையாத மாவட்டங்களில் குறிப்பிட்ட தளர்வுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

அதன் படி, தமிழகத்தில் “கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை” ஆகிய 11 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களாகத் தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

இதனால், குறிப்பிட்ட இந்த 11 மாவட்டங்களைத் தவிர்த்த, மற்ற மாவட்டங்களுக்குத் தமிழக அரசு சில தளர்வுகளை அளித்து உள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் உள்ள தளர்வுகள்

- கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும்.

- தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், 10 சதவீத பணியாளர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படலாம். 

- மளிகை, பழக்கடை, பூக்கடை, நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை செயல்படலாம்.

- தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் அரசு அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.

- கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திர பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழிலுக்கு இ-பதிவுடன் அனுமதி பெறலாம்.

- தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

- மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி.

- இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனை மட்டும் செயல்பட அனுமதி.

- அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி.

- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு அனுமதி.

- மின் பொருள்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

- மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி.

- கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

- வாடகை வாகனங்கள் டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி. 

- வாடகை டாக்ஸி ஓட்டுனர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

- நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காகப் பயணிக்கத் தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இ பாஸ் பெற்று பயணிக்க அனுமதி.

- நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்த அனுமதி.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் உள்ள தளர்வுகள்

- கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில்,  சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளொன்றுக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய அனுமதி.

- தனியாக செயப்லடுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி உண்டு.

- காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி உண்டு.

- மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். 

- மீன் சந்தைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்யவும் உத்தரவு.

- இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

- அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளகளுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி உண்டு.

பொதுவான கட்டுப்பாடுகள்

- வழிபாட்டுத் தலங்களுக்குப் பக்தர்கள் செல்ல தொடர்ந்து தடை நீட்டிப்பு.

- பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குமாறும், இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.