2022 ஐபிஎல் போட்டிகளின் தொடக்க ஆட்டங்களில் கிட்டதட்ட 26 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 15 வது சீசனான, வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் 15 நாட்களுக்குளே உள்ள நிலையில், இந்த சீசினின் தொடக்க போட்டிகள் நடைபெறும் சமயங்களில் பல நாடுகளின் சர்வதேச விளையாட்டு போட்டிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், அந்தந்த நாடுகளின் வாரியங்கள் தங்கள் நாட்டு வீரர்களை, சர்வதேச போட்டிகளை தவிர்த்து விட்டு ஐபிஎல்லில் பங்கேற்க அனுமதிக்காது என்றே கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, ஐபிஎல் துவக்க ஆட்டங்களில் பல ஐபிஎல் அணிகள், தங்களது சிறந்த சர்வதேச வீரர்களை களம் இறக்க முடியாத அளவுக்கு ஒரு கூழல் தற்போது உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், இங்கிலாந்து அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆனல், இந்த டெஸ்ட் போட்டி தொடரின் கடைசி போட்டியானது மார்ச் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இந்த ஐபிஎல் போட்டியில் களம் காண்பது என்பது சந்தேகமாகி உள்ளது. 

அதே போல், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் தற்போது டெஸ்ட் தொடரில் மோதி விளையாடி வருகின்றன. தொடர்ச்சியாக, இந்த இரு அணிகளும் தொடர்ந்து 3 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுகின்றன. அதன் படி, இந்த இரு அணிகளின் டெஸ்ட் தொடரானது மார்ச் 25 ஆம் தேதி முடிவடைகிறது. எனினும், இந்த இரு அணிகளின் சுற்றுப்பயணம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக, ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர்களும், இந்த முறை ஐபிஎல் போட்டிகளின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, தென்னாப்பிரிக்கா - வங்கதேசத்திற்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஒரு நாள் தொடரானது வரும் 23 ஆம் தேதியும், டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் ஏப்ரல் 12 ஆம் தேதியுடனும் முடிவடைகிறது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாட்டு வீரர்களும்,  இந்த முறை ஐபிஎல் போட்டிகளின் தொடக்க போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி பார்க்கும் போது, “வெளிநாட்டு விரர்களான சேர்ந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஜானி பேர்ஸ்டோ, குயின்டன் டி காக், டேவிட் மில்லர், அல்ஸாரி ஜோசப், ரஸ்ஸி வான் டெர் டுசென், சீன் அபோட், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், அன்ரிச் நார்ட்ஜே , டுவைன் பிரிட்டோரியஸ், ரஹ்மான், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், க்ளென் மேக்ஸ்வெல், நாதன் எல்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ், மார்க் வூட் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்கள், இந்த ஐபிஎல்லின் துவங்க ஆட்டங்களில் பங்கேற்று விளையாடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.