மகன் வயது இளைஞனோடு மனைவிக்கு கள்ளக் காதல் இருந்ததை கண்டுபிடித்துக் கண்டித்த கணவனை, காதலனோடு சேர்ந்து மனைவியே முகத்தில் தலையணை அமுக்கி கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் குதலு ரோடு பகுதியைச் சேர்ந்த அல்தாப் மெகதி என்பவர், அங்குள்ள மண்டியா அருகே உள்ள தக்கஹள்ளி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வந்தார். 

இந்த கல்லூரியில் துணை முதல்வருக்கு திருமணமாகி, ரிஸ்வானா பேகம் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிக்கு, மொத்தம் 3 மகன்கள் உள்ளனர்.

இவர்களது வாழ்க்கை ஹாப்பியா சென்றுகொண்டிருந்த நிலையில், கள்ளக் காதல் புகுந்து கொலையும் செய்ய வைத்து உள்ளது.

அதாவது, மனைவி ரிஸ்வானா பேகத்திற்கும், அங்குள்ள தாவணகெரேயை சேர்ந்த ரகமத் உல்லா என்ற மகன் வயது கொண்ட இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியிருக்கிறது.

கள்ளக் காதலன் ரகமத் உல்லாவுக்கு, ரிஸ்வானா பேகத்தின் மகன் வயது இருக்கும் என்றும், கூறப்படுகிறது. ஆனாலும், இதனைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத இவர்கள் இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

இப்படியாக, இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். ஒரு கட்டத்தில், இந்த விசயம் கல்லூரியில் துணை முதல்வரான கணவனுக்குத் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், இது பற்றி தனது மனைவி ரிஸ்வானா பேகத்தைக் கடுமையாகக் கண்டித்து உள்ளார். ஆனால், கணவனின் கண்டிப்பை பெரிதுபடுத்தாத ரிஸ்வானா பேகம், தன்னுடைய கள்ளக் காதலை மேலும் தொடர்ந்து உள்ளார்.

அதைப் பற்றியும் தெரிந்துகொண்ட கணவன் அல்தாப் மெகதி, தன் மனைவி ரிஸ்வானா பேகத்துடன் அடிக்கடி சண்டைக்குச் சென்று உள்ளார். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது.

ஒரு கட்டத்தில், கணவன் சண்டைப் போடுவது குறித்து ரிஸ்வானா பேகம், தனது கள்ளக் காதலன் ரகமத் உல்லாவிடம் புகாராகக் கூறியுள்ளார். 

குறிப்பாக, “என் கணவன் அல்தாப்பை கொலை செய்தால் தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும்” என்று, இருவரும் கருதி அது தொடர்பாகத் திட்டம் போட்டு உள்ளனர். 

அதன் படி, கடந்த 29 ஆம் தேதி கணவன் அல்தாப், தனது வீட்டில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, அந்த நள்ளிரவு நேரத்தில், தனது வீட்டுக்குக் கள்ளக் காதலன் ரகமத் உல்லாவை, ரிஸ்வானா பேகம் வரவழைத்து உள்ளார். 

அதன் பிறகு, அவர்கள் இருவரும் சேர்ந்த தூங்கிக்கொண்டு இருந்த கணவன் அல்தாப் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்து உள்ளனர். 

இதனால், அவர் மூச்சு முட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். அதே நேரத்தில், அவர் உடலின் சில இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, இரவோடு இரவாக அங்கிருந்து கள்ளக் காதலன் தப்பித்துச் சென்று உள்ளார். காலையில் விடிந்ததும், தனது கணவன் உயிரிழந்து விட்டதாகக் கூறி, அவர் மனைவி நாடகம் ஆடி உள்ளார். ஆனால், அல்தாப் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் மண்டியா டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, ரிஸ்வானா பேகத்திடம் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், கள்ளக் காதலன் ரகமத் உல்லா உடன் இணைந்து கணவனைக் கொன்றதை, அவர் மனைவி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.