கொரோனாவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் அதீத சத்தத்தினால் ஏற்படும் ஒலி மாசு முன்பை விட பாதியாகக் குறைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. புளோரிடா, நியூயார்க், கலிபோர்னியா மற்றும் டெக்சாஸில் உள்ள தன்னார்வ ஆப்பிள் வாட்ச் பயனர்களிடமிருந்து யு-எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் ஆப்பிள் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒலி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் தொற்றுநோய்க்கு முன்னும், பின்னும் இருக்கும் சத்தத்தினால் ஏற்படும் மாசு குறித்து அளவிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கடிதங்கள் என்ற இதழில் வெளியிடப்பட்டன. அதன்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடும்போது, ​​மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், பொது இடங்களுக்குச் செல்வதை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி சராசரி ஒலி அளவு சுமார் 3 டெசிபல்கள் குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனால், மக்கள் பேசுவதை குறைத்துள்ளது காலப்போக்கில் மக்களின் ஒட்டுமொத்த சுகாதார விளைவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று யு-எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் இணை பேராசிரியர் ரிக் நீட்செல் கூறினார். ஏனெனில், நமது எண்ணங்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் தற்போது டிஜிட்டல் சாதனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றார். 

ஆய்வில் கலிஃபோர்னியா மற்றும் நியூயார்க் ஆகிய இரண்டு நகரங்களிலும் ஒலி அளவு வெகுவாக குறைந்திருந்தது. அதேநேரத்தில் புளோரிடா மற்றும் டெக்சாஸில் ஒலி குறைப்பு சற்றே குறைந்திருந்தது.
 கொரோனாவால் பெரும்பாலான மக்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வார நாள்களுக்கும், வார இறுதி நாள்களுக்கும் பெரிதாக வேறுபாடுகள் காணப்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் காற்று  மாசுபாடு குறைந்திருந்தாலும்கூட, டெல்லியில் இப்போதும் காற்று மாசுபாட்டுக்கான வேகமும் ஆபத்தும் அதிகமாகவே இருக்கிறது. டெல்லியின் காற்றின் தரம் கடந்த வாரத்தில் மிக மோசமாக மாறியதாக சொல்லப்பட்டது. ஜூன் 29 க்குப் பிறகு முதல் முறையாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீட்டை (AQI) 215 ஆக பதிவு செய்தது. இது செவ்வாயன்று 178 ஆக இருந்தது. அதிக அளவு காற்று மாசுபாடு என்பது ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்சினையாகும், இது சாதகமற்ற வானிலை நிலைமைகள், அண்டை பிராந்தியங்களில் பண்ணை தீ மற்றும் உள்ளூர் மாசுபடுத்தல் காரணங்கள் காரணமாக இருக்கலாம்.

மாசு கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு ஆணையம் டெல்லி, ஹரியானா, உ.பி., மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் அண்டை நகரங்களான நொய்டா, கிரேட்டர் நொய்டா. காசியாபாத், பரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய, அவசரகால தேவைகளை தவிர, டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவதை தடை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. டீசல் ஜெனரேட்டர்களின் பயன்பாடு அனுமதிக்கப்படும் விலக்குகள் மற்றும் அவசரகால சேவைகளின் பட்டியலை EPCA விரைவில் வெளியிடும். கொரோனா தொற்றின் போது சுகாதார நிலைமைகள் ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும், மாசுபாடு அவர்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றுவதற்கு போதுமான சான்றுகள் உள்ளன என்றும் அது வலியுறுத்தியது.
 
குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அதிக விழிப்புணர்வு தேவைப் படும். எனவே தொழில்துறை அடுக்குகள், குப்பைகளை கொட்டுதல் மற்றும் சட்டவிரோத எரிபொருட்களின் பயன்பாடு போன்ற ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டு அபராதம் விதிக்கப் படுகின்றன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலைமையிலான பணிக்குழு மற்றும் ஈபிசிஏ ஆகியவை நிலைமையை அடிக்கடி மதிப்பாய்வு செய்து, தேவை ஏற்பட்டால் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் கூறுகின்றனர்