“தேனிலவுக்கு என் நண்பர்களும் வருவார்கள்” மனைவியிடம் அனுமதி கேட்ட கணவன்! டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட்..

“தேனிலவுக்கு என் நண்பர்களும் வருவார்கள்” மனைவியிடம் அனுமதி கேட்ட கணவன்! டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட்.. - Daily news

“தேனிலவுக்கு என் நண்பர்களும் வருவார்கள்” என்று, மனைவியிடம் அனுமதி கேட்ட கணவன், மனைவியை கண்டுக்கொள்ளாமல், நண்பர்களுடன் சேர்ந்து கணவன் டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை ரபாலே பகுதியைச் சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரணவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடையே, கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் தொடர்பாக தொடக்கத்தில் சரவணனின் தந்தை, அமுதாவை தனது மகனுக்கு பெண் கேட்டு சென்றபோது, சரவணனுக்கு  தன்னை விட சம்பளம் குறைவாக இருப்பதாக கருதி, “மாப்பிள்ளை வேண்டாம்” என்று, அமுதா கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த சரவணன், தனக்கு அதிக சம்பளத்தில் புதிய வேலை கிடைத்திருப்பதாக கூறி, அமுதாவை நம்ப வைத்து, திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து உள்ளார்.

இதனையடுத்து, கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. 

இந்த திருமணத்துக்குப் பிறகு, அவர்கள் இருவரும் தேனிலவு செல்ல முடிவு செய்த நிலையில், “நாம் செல்லும் தேனிலவுக்கு எனது நண்பர்களும் வருவார்கள்” என்று, தனது மனைவியிடம் சரணவன் கூறியிருக்கிறார்.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “என் நண்பர்கள் வந்தால் ரொம்பவே ஜாலியாக இருக்கும்” என்று, தனது மனைவியை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

அதன் படி, அவர்கள் இருவரும் தேனிலவுக்கு சென்ற நிலையில், அங்கு கணவன் - மனைவி இடையே பாலியல் ரீதியான எந்த உறவும் நடைபெறவில்லை என்றும், கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு மாறாக படுக்கையறையில் கணவன் சரவணன், தனது செல்போனை கையில் வைத்துக்கொண்டு சுய இன்பம் அனுபவிப்பதை அவரது மனைவி பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

அத்துடன், அதன் தொடர்ச்சியாக மறு நாள் சரவணனின் போனில் அவரது மனைவி, அவருடைய தந்தையுடன் போனில் பேசிக்கொண்டிருந்த நிலையில், போன் பேசிவிட்டு அதனை பார்த்த போது அதில் ஓரின சேர்க்கையாளர் மொபைல் ஆப் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்ததைக் கண்டு இன்னும் கடுமையாக அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

மேலும், இந்த போனில் ஓரின சேர்க்கை தொடர்பான சாட்டிங், வீடியோ போன்றவையும் அதிக அளவில் இருந்தது கண்டு, அப்படியே ஆடிப் போய் உள்ளார். 

அவற்றுடன், சரவணன் “ஒரு ஓரின சேர்க்கையாளர்” என்றுபதும், அவரது மனைவிக்கு தெரிய வந்தது. 

இதனை மறைத்து அமுதாவை அவர் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.

ஆனால், இது தொடர்பாக சரவணனிடம் கேட்டபோது, அவர் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அமுதா, இது தொடர்பாக தனது சகோதரியிடம் கூறி அழுது உள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரும் இது குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், இது தொடர்பான ஆதாரங்களும் போலீசாரிடம் சமர்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, சரவணன் தானே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

குறிப்பாக, “ஓரின சேர்க்கையாளர் என்பதை மறைத்து திருமணம் செய்து கொண்டது தவறு” என்றும், நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்து உள்ளது. 

இதனையடுத்து, சரவணன் தற்போது தலைமறைவாகிவிட்டாதாகவும், அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment