காதல் தோல்வியால் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த இளம் பெண்! பரபரப்பு..

காதல் தோல்வியால் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த இளம் பெண்! பரபரப்பு.. - Daily news

காதல் தோல்வியால் கடும் விரக்தியடைந்த இளம் பெண் ஒருவர், ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது, சென்னை அடுத்து உள்ள பொன்னேரி  சின்னகவானம் ஜோதிலிங்கம் தெருவைச் சேர்ந்த வவயதான துர்கா தேவி என்ற இளம் பெண், பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார்.

அதே நேரத்தில், தனது குடும்பத்துடன் வசித்து வந்த அந்த இளம் பெண், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்திருக்கிறார்.

இப்படியாக, இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், அந்த இளம் பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதனால், தனது காதலனிடம் சென்று, “நாம் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று, காதலியான துர்கா தேவி கூறியதாக தெரிகிறது.

அப்போது, தனது ஏழ்மை நிலைமையை காரணமாக கூறிய அந்த காதலன், “இப்போது வேண்டும் சிறிது காலம் போகட்டும்” என்று, பதில் அளித்து, தற்போது திருமணம் செய்ய மறுத்ததாகம் தெரிகிறது. 

இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, கோபத்தில் “இனி மேல், இருவரும் காதலிக்காமல் பிரிந்துவிடலாம்” என்று, அவர்கள் இருவரும் பேசியதாகவுமு் கூறப்படுகிறது. 

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் துர்கா தேவி, வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான், நேற்று மாலை பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில் அந்த இளம் பெண்ணான துர்கா தேவி ஏறி இருக்கிறார்.

அந்த ரயிலில் பயணித்த அந்த இளம் பெண், அந்த ரயிலான கொசஸ்தலை ஆற்றுப் பாலத்தில் கடந்து வந்துக்கொண்டிருந்த போது, ரயிலில் இருந்து திடீரென்று அந்த கூவம் ஆற்றில் குதித்து உயிரை விட்டு உள்ளார்.

இதனை, அருகில் நின்று பார்த்த சக பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பதறியடித்துக்கொண்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். 

அதன்படி, ரயில்வே போலீசாரும் அங்குள்ள எண்ணூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்களும் உதவியுடன் அந்த ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, துர்கா தேவியின் சடலத்தை மீட்டனர். 

பின்னர், பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தான், இந்த காதல் விவகாரம் தெரிய வந்தது.

Leave a Comment