பெண் ஊழியரிடம் அத்துமீறிய டாக்டர் பணியிடை நீக்கம்!

பெண் ஊழியரிடம் அத்துமீறிய டாக்டர் பணியிடை நீக்கம்! - Daily news

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள பெண் ஊழியரிடம் தலைமை மருத்துவர் ஆனந்தன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக ஆனந்தன் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் வீரப்பன்சத்திரம் சேர்ந்த திருமணமான 30 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியர் ஒருவர் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். 

 இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 22-ம் தேதி அந்த பெண் ஊழியர் பணியில் இருந்தபோது அங்கு வந்த தலைமை  மருத்துவர் ஆனந்தன் முதலில்  உங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து பின்னர் அந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஊழியர் இது குறித்து தனது கணவரிடம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அந்த பெண் ஊழியர் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து தலைமை மருத்துவர் ஆனந்தன் மீது புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரில் போலீசார் மருத்தவர் ஆனந்தன் மீது பெண்களை மானபங்கபடுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை மருத்துவர் பொறுப்பில் இருந்து ஆனந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment