உக்ரைன் மீதான ரஷியா தாக்குதலில் 17 லட்சம் பேர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். ஹசன் என்ற 11 வயது சிறுவன் தனியாக பயணம் செய்து சுலோவாக்கியா எல்லையை அடைந்தார்.

ukraine war

உக்ரைன் மீது ரஷியா இன்று 12-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. கெர்சன் நகரை கைப்பற்றி ரஷிய படைகளுக்கு தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் துப்பாக்கி சண்டை நடக்கிறது.உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷியபடைகள் சபோரிஜியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை தாங்கினர். இதானால் சபோரிஜியாவில் இருந்த ஜூலியா என்பவர் தனது 11 வயது மகன் பிரேவ் ஹசனையாவது காப்பாற்ற வேண்டுமென கருதி அருகில் 750 மைல் தூரத்தில் உள்ள சுலோவாகியாவுக்கு தனியாக அனுப்பி வைத்தார். 

இந்நிலையில் ஹசன் தனது பாஸ்போர்ட், அம்மாவின் எழுதி கொடுத்த கடிதம்  மற்றும் கையின் பின்புறத்தில் எழுதப்பட்ட தொலைபேசி எண்ணுடன் மட்டுமே போரால் பாதிக்கப்பட்ட அந்த நகரை விட்டு வெளியேறினார். சிறுவன் ஹசன்  750 மைல்களுக்கு மேல் பயணம் செய்து சுலோவாக்கியா எல்லையை சென்றடைந்தார். அங்கிருந்த திகைத்துப் போன தன்னார்வலர்கள் சிறுவன் வைத்து இருந்த  கடிதத்தைப் படித்துவிட்டு, அவரது கையில் எழுதப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு , அவர்களது தலைநகரான பிராட்டிஸ்லாவாவில் உள்ள சிறுவனின் உறவினர்கள்  அவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.

அதிகாரிகள் சிறுவனுக்கு  சூடான உணவையும், பானத்தையும் கொடுத்தனர், பின்னர் அவரது "புன்னகை, அச்சமின்மை மற்றும் உறுதிப்பாட்டிற்கு" பாராட்டு தெரிவித்தனர். ஹசனின் அம்மா ஜூலியா கூறியதாவது: நான் ஒரு விதவை, எனக்கு அதிகமான குழந்தைகள் உள்ளனர். எனது மகனை கவனித்து, எல்லையை கடக்க உதவிய சுலோவாக்கியா தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தெரிவித்தார்.