இன்று பிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. 

world cancer day

புற்றுநோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், உரிய சிகிச்சை மேற்கொண்டு முழுமையாக குணமடையலாம். புற்றுநோய் குறித்த அச்சம் தேவையற்றது. இது குறித்த விழிப்புணர்வுதான் அவசியமானது. புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2000-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பிப்.4-ம் தேதியை உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அறிவித்து, தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  தற்போது உலகளவில் புற்றுநோய் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இது அதிகமாகப் பேசப்படும் ஒரு பயங்கரமான நோயாகவும், மரண பயத்தோடு இணைந்த நோயாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். மக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே, இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 

இந்நிலையில் புற்றுநோயை குறித்து ஒவ்வொரு வரும் விழிப்புணர்வு பெற்று, மற்றவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம். புற்றுநோயை குறித்து அரசு பல முகாம் மற்றும் பிரச்சாரம் நடத்தி வருகிறது. நம் நாட்டில் தினசரியும் 1300 பேர் புற்றுநோயினால் மரணமடைகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 11.50 லட்சம் நோயாளிகள் புதிதாக கண்டறியப்பட்டனர். நாடு முழுவதும் 22.50 லட்சம் பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மார்பகப்புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள்தான் நம் நாட்டில் அதிகம் என்கிறது மருத்துவ உலகம்.

மேலும் புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம். விழிப்புணர் வுநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளின் மனிதர்களின் சராசரி ஆயுளை 10 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாரம்பரிய உணவுப்பழக்கத்தை நாம் இன்றைக்கு மறந்து விட்டோம். கண்டதை கண்ட நேரத்தில் சாப்பிட்டு நேரங்கெட்ட நேரத்தில் உறங்கி உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை நாம் மாற்றி வைத்து விட்டோம். மோசமான உணவுப் பழக்கம் நிச்சயமாகப் புற்றுநோய் அபயாத்தை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சரியான அளவில் பழங்களும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது பல நோய்களுக்கும் வழிவகுக்கும். உலக சுகாதார நிறுவனம் நடப்பு ஆண்டு `I am and I will' என்னால் முடியும் என்ற பிரகடனத்துடன் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

புற்றுநோயின் அறிகுறிகள், மருக்கள் பெரிதாவது, திடீரென உடல் எடை குறைவது, 10, 15 நாட்களாகியும் காய்ச்சல் குணமாகாதது, நீண்ட நாட்களாக சளி, இருமல் நீடிப்பது, மல ஜலம்கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது, குரல்வளையில் மாற்றம் ஏற்படுவது உள்ளிட்டவற்றை புற்றுநோய் உருவாகும் எச்சரிக்கை அறிகுறிகளாக கொள்ளலாம். அதேசமயம், இந்த அறிகுறிகள் புற்றுநோயை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவை அல்ல.

அதேபோல் இந்தியாவில் நகர்ப்புறங்களில் மார்பகப் புற்றுநோய் தாக்கமும், கிராமப்புறங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்கமும் அதிகம் உள்ளது. எனவே, பெண்கள் மேமோகிராம் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். அதேபோல, ஆண்கள் ப்ராஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். குடல் புற்றுநோயை கொலனோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டு அறியலாம்.  படித்தவர்களிடம்கூட போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில், பாமர மக்களின் நிலை? எனவே, அரசு, மருத்துவமனைகள், தன்னார்வ அமைப்புகள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வை ஓர் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.