தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராகவும் ரசிகர்களின்  ஃபேவரட் கதாநாயகனாகவும் திகழும் நடிகர் பிரபாஸ் அடுத்ததாக கன்னடத்தில் வெளிவந்து இந்திய அளவில் மெகா ஹிட்டான கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார். 

முன்னதாக நேரடி பாலிவுட் திரைப்படமாக ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார். இதிகாசக் கதைகளைமான இராமாயணத்தைத் தழுவி தயாராகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மீண்டும் தெலுங்கு & ஹிந்தி என இரு மொழிகளில் தீபிகா படுகோன் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து ப்ராஜெக்ட் கே படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார்.

இதனிடையே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் கடந்த வருகிற மார்ச் 11-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகிறது பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம். இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ரொமான்டிக் ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் ராதேஷ்யாம் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, பாக்யஸ்ரீ, கிருஷ்ணம் ராஜு, சத்யராஜ், ஜெகபதிபாபு, முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

UV  கிரியேஷன்ஸ் மற்றும் T-SERIES பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, வெளியாகும் ராதே ஷ்யாம் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் தமன்.S பின்னணி இசை சேர்க்கிறார். இந்நிலையில் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.