மக்களின் மனதில் என்றென்றும் நகைச்சுவை மன்னனாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் வைகைப்புயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸில் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகிவிட்டார். அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் இணைந்து வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இதனிடையே பக்கா காமெடி என்டர்டெய்னராக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். முன்னதாக வடிவேலுவின் கதாபாத்திரங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமான கதாபாத்திரங்களில் ஒன்றான நாய் சேகர் கதாபாத்திரத்தின் பெயரில் வைகைபுயல் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை, நாய் சேகர் கதாப்பாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சுராஜ் அவர்களே இயக்குகிறார்.

வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், செல்வா.RK படண்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு ஒரு பாடலை பாடியுள்ளார். 

மேலும் நடனப்புயல் பிரபு தேவா இப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் இசை உரிமையை தின்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல் பாடலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.